feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

நடிகர் சங்கத்தில், ஜெய் ஆகாஷ் புகார்

Labels:



மதன் படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்தது சுனைனாதான் என்று அப்படத்தின் இயக்குநர் ஜெய் ஆகாஷ் கூறியுள்ளார்.

நடிகர் ஜெய் ஆகாஷ் முதன் முதலாக டைரக்டு செய்துள்ள படம், மதன். இந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார்.

சுனைனா, ரேணுகா மேனன் ஆகிய இருவரும் ஜெய் ஆகாஷ் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். படத்தில் படுக்கை அறை காட்சிகளுடன் கூடிய ஒரு பாடல் காட்சி இடம் பெறுகிறது. அதில், சுனைனா படுகவர்ச்சியாக நடித்து இருக்கிறார்.

ஆனால், அந்த காட்சியில் நான் நடிக்கவில்லை. ஒரே ஒருநாள் மட்டுமே மதன்' படத்தில் நான் நடித்தேன். எனக்கு பதில், டூப்' நடிகையை நடிக்க வைத்து ஆபாசமாக படமாக்கி இருக்கிறார்கள்'' என்று சுனைனா புகார் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சுனைனா மீது ஜெய் ஆகாஷ் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்து இருக்கிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

காதலில் விழுந்தேன் படத்துக்கு முன்பே சுனைனாவை, மதன்' படத்துக்காக நான் ஒப்பந்தம் செய்து இருந்தேன். மதன்' படத்தில்தான் சுனைனா முதல் முதலில் நடித்தார். அவரை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினேன்.

படுக்கை அறை காட்சியில் அவர்தான் நடித்து இருந்தார். டூப்' நடிகையை பயன்படுத்தவில்லை. முதல்கட்ட படப்பிடிப்பின்போது சுனைனா என்னிடம் வந்து, காதலில் விழுந்தேன்' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருப்பதாகவும், அந்த படத்தில் நடிப்பதற்கு தன்னை அனுமதிக்கவேண்டும் என்றும் கெஞ்சினார்.

ஒரு இளம் நடிகையின் வாழ்க்கை நம்மால் பாதிக்கப்பட வேண்டாம் என்ற பரந்த மனதுடன், காதலில் விழுந்தேன்' படத்தில் நடிப்பதற்கு சுனைனாவுக்கு நான் அனுமதி கொடுத்தேன். அந்த பரந்த உள்ளத்துக்கு சுனைனா நன்றிக்கடன் செய்து விட்டார்.

படத்தில் அறிமுகப்படுத்தியவர்களை எந்த நடிகரும், நடிகையும் மறக்க மாட்டார்கள். கடைசிவரை நன்றிக்கடனாக இருப்பார்கள். சுனைனா நன்றிக்கடனாக இல்லையென்றாலும், என் மீது அபாண்டமாக பழி சுமத்தி இருக்க வேண்டாம். அவரால் என் இமேஜ்' பாதிக்கப்பட்டு விட்டது.

எனவே இந்த பிரச்சினை பற்றி நடிகர் சங்கம் விசாரித்து, சுனைனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெய் ஆகாஷ் கூறியிருக்கிறார்.





0 comments:

Post a Comment