feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

தொழிலதிபருக்கு டாட்டா காட்டிய ராக்கி சவந்த்?

Labels:

தனது வருங்கால கணவரை சுயம்வரம் மூலம் தேர்ந்தெடுக்கப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தி திரையுலக பிரபல நாயகி ராக்கி சவந்த் அறிவித்திருந்தார்.

அவர் நடத்திய சுயம்வரத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒரு தனியார் தொலைக்காட்சி ராக்கி சவந்த் சுயம்வரத்தை நேரடியாக ஒளிபரப்பியது. அதில் பல சுற்றுகளுக்கு பிறகு இறுதிச்சுற்றுக்கு 4 பேரை ராக்கி சவந்த் தேர்ந்தெடுத்தார்.

அந்த 4 பேரில், எலேஷ் பருஜன்வாலா என்ற வாலிபரை தனது வருங்கால கணவராக ராக்கி சவந்த் தேர்ந்தெடுத்தார். எலேஷ், குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். கனடா நாட்டில் டொரண்டோ நகரில் ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

எலேஷை திருமணம் செய்து கொள்ளப் போவதாக ராக்கி சவந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருவரும் கழுத்தில் மாலையுடன் திருமண கோலத்தில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். சில நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக சென்றனர்.

இந்நிலையில், எலேஷை ராக்கி சவந்த் திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. இதற்கு இருவருக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளே காரணம் ஆகும். தற்போது ராக்கி சவந்தும், எலேஷும், பதி பத்னி அவுர் வோ' என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார்கள்.

இதன் இறுதி பகுதி ஒளிபரப்பாகும்போது, தங்களது திருமணம் ரத்து செய்யப்படுவதாக இருவரும் அறிவிப்பார்கள் என்று ராக்கி சவந்தின் நெருங்கிய தோழிகள் தெரிவித்தனர். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருவரும் உண்மையில் எண்ணியதே இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

எலேஷை திருமணம் செய்து கொள்வீர்களா? என்ற கேள்விக்கு ராக்கி சவந்த் நேரடியாக பதில் அளிக்கவில்லை. இருப்பினும், எலேஷுடன் திருமணம் கிடையாது என்பதை சூசகமாக உணர்த்தினார்.

எலேஷும், நானும் வெவ்வேறு கலாச்சாரத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறோம். அவர் மேற்கத்திய கலாச்சாரத்தை விரும்புகிறார். நான் கிழக்கத்திய கலாச்சாரத்தை விரும்புகிறேன். ஓர் இந்தியப் பெண், மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுபவரை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று நான் கருதவில்லை. தற்போது ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் கூட, எனக்கும், அவருக்கும் இடையே நிறைய ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன என்று ராக்கி சவந்த் கூறினார்.





0 comments:

Post a Comment