feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் ஏ.ஆர்.ரஹ்மான்

Labels:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களைத் தேர்வு செய்யும் கெüரவம் மிக்க நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
திரைப்படத்துறையில் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது ஆஸ்கர். 1929-ம் ஆண்டிலிருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள சிறந்த திரைக்கலைஞர்கள் ஆஸ்கர் விருது பெறுவதையே தங்கள் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.
இத்தகைய மதிப்பு வாய்ந்த ஆஸ்கர் விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் 2009-ம் ஆண்டுக்கான நடுவர் குழுவில் பொறுப்பேற்க ஆஸ்கர் விருது கமிட்டியிடமிருந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 82-ம் ஆஸ்கர் விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவில் பொறுப்பேற்க ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட 139 பேருக்கு இந்த ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களோடு சேர்ந்து, உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 6,000 திரைத்துறை சாதனையாளர்கள் ஆஸ்கர் விருதுகளைத் தேர்ந்தெடுக்கத் தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள். அவர்களில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இயக்குநர் மீரா நாயர், ஹாலிவுட் பிரபலங்கள் வில் ஸ்மித், க்வென்டின் டரான்டினோ, ஜேக் நிக்கல்ஸன், ஹக் ஜேக்ஸன், பீட்டர் கேப்ரியல் ஆகியோரும் அடங்குவர்.
ஆஸ்கர் விருதுக்கு ஒரு முறையாவது பரிந்துரை செய்யப்பட்டவர்களே இந்தத் தேர்வுக்குழுவில் இடம்பெற மூடியும். இசைத்துறையில் தன்னுடைய பங்களிப்பால் சிறந்த சாதனை படைத்ததற்காகவும் 2008-ம் ஆண்டு "ஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்காக சிறந்த பாடல் இசையமைப்பாளர், சிறந்த இசையமைப்பாளர் என இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றதாலும் ஏ.ஆர்.ரஹ்மான், இருவேறு கருத்துக்கு இடமில்லாமல் இந்த நடுவர் குழுவில் பொறுப்பேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய இசையமைப்பாளர் ஒருவர் ஆஸ்கர் விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை. 43 வயதாகும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது "கப்ஃபுள்ஸ் ரெட்ரீட்', "எ நைட் ஆஃப் பேúஸஜ்' போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றி வருகிறார். ஆஸ்கர் விருதுகளை வென்ற பிறகு ஏராளமான ஹாலிவுட் படங்களில் பணியாற்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
தமிழில் மணிரத்னத்தின் "ராவணா', ரஜினியின் "எந்திரன்', கெüதம் மேனனின் "விண்ணைத்தாண்டி வருவாயா' உள்பட 7 திரைப்படங்களுக்கு இப்போது இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.




உன்னைப் போல் ஒருவன் - 'ஆனந்தவிகடன்' விமர்சனம்

Labels:

நகரின் முக்கிய இடங்களில் வெடிகுண்டுகளை வைத்துவிட்டு அவற்றை வெடிக்கச் செய்யாமல் இருக்க, போலீஸ் கமிஷனர் மோகன்லாலிடம் பேரம் பேசுகிறார் கமல். இந்தியாவின் முக்கியமான குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்பது பேரம்.

காவல்துறை தனது முழு பலத்தைப் பிரயோகித்தும் கமலின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. டெக்னிக்கலாக அப்படியொரு தண்ணி காட்டுகிறார். வேறு வழியில்லாமல் நான்கு தீவிரவாதிகளையும் கமல் சொல்லும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அடுத்த இருபது நிமிடங்களுக்கு பளீர், சுளீர் திருப்பங்கள். ஹிந்தியில் வெளியான எ வெட்னெஸ் டே படத்தின் தமிழாக்கம்.

காலையில் மார்க்கெட்டில் வாங்கிய காய்கறிகள் வாடி வதங்குவதற்குள், மாநகரத்தைத் துளிக்கூட சலனப்படுத்தாமல் போலீஸுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பாடம் எடுக்கிற ஜெட் வேகத் திரைக்கதைதான் படத்தின் ரியல் ஹீரோ.

பிரேமுக்கு பிரேம் தானே ஆக்கிரமிக்க நினைக்கிற ஹீரோக்களுக்கு மத்தியில் பிற நடிகர்களுக்குச் சமமான ஸ்கோப், சொல்லப் போனால் தன்னைவிடக் கூடுதலாக வாய்ப்பு கொடுத்த கமலுக்கு அன்பான கைகுலுக்கல்கள்.

போலீஸ் கமிஷனராக மோகன்லால், ஒரு பெர்ஃபெக்ட் ஃபிட், அசாத்தியமான சூழலில் ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் துல்லியமாகக் கண் முன் நிறுத்துகிறார்.

தலைமைச் செயலாளருடன் உரசிக் கொள்ளும்போதும், தனது ஜூனியர் அதிகாரிகளிடம் கனிவும், கண்டிப்புமாக வேலை வாங்கும்போதும் வெல்டன் லால்.(த.செ.வாக வரும் லட்சுமியின் க்ளோஸ் அப்புகளைத் தவிர்த்திருக்கலாம்)

படம் முழுக்க ஒரே இடத்தில் இருந்தபடி ஹெட்போன் மைக்கில் பேசிக் கொள்வதுதான் கமல் வேலை. ஆனால், அதிலும் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஷன்களைக் காட்டி மறுபடி நிரூபித்திருக்கிறார். சின்சியருக்கு சின்சியர்.

ஜூனியர்களாக வரும் பரத்ரெட்டி, கணேஷ் வெங்கட்ராம் எல்லாமே கேரக்டருக்கு ஏற்ற மிடுக்கு. நியூஸ் ரிப்போர்ட்டராக வரும் அனுஜா ஐயர், ணோகன்லாலிடம் "கேன் ஐ ஸ்மோக் ஹியர்..?" எனும் இடத்தில் அட போட வைக்கிறார்.

ஒரு காமன்மேன் இத்தனை அசகாயக் காரியங்கள் மூலம் அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்கச் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுகிறதுதான். ஆனால் அதற்கான டெக்னிக்கல் சங்கதிகளைக் காட்டி நியாயப்படுத்தி விடுகிறார்கள். தேவை தில்லும், துணிச்சலும்தான்.

ஆனால் படமே கொஞ்சம் டெக்னிக்கல் அறிவைத் தாண்டி நிற்கும்போது, காட்சிக்குக் காட்சி இங்கிலீஷில் இப்படி சொடுக்கியிருக்க வேண்டுமா? "ரீமேக் படத்தை இன்னொரு வாட்டி தமிழ்ல டப்பிங் பண்ணுங்கப்பா" என்கிற கமெண்ட்டுகள் காதில் விழுகின்றன.

கேமராமேன் மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு கிரிஸ்டல் கிளியர். அறிமுகம் என்பதாலேயே மனம் போன போக்கில் வாத்தியங்களை இசைக்கவிடாமல் கச்சிதமாக பின்னணி இசையை ஸ்கோர் செய்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

ஹிந்தி ஒரிஜினலில் அந்தக் கதாநாயகனின் கோபத்துக்குக் காரணமான ரயில் குண்டு வெடிப்புகள், படத்தின் கிளைமாக்ஸில் அவன் வார்த்தைகளில் வெடிப்பதற்கு வலுவான களத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இங்கே கமலின் கோபத்திற்குச் சொல்லப்படுவதோ இங்குள்ள வெகுஜனத்தின் உணர்வுகளைத் தூண்டாத சமாச்சாரங்கள் பல(பெஸ்ட் பேக்கரிகூட..!) எந்த மதத்திலிருந்து வந்தாலும் தீவிரவாதத்தைத் தண்டிப்பதில் தாமதம்கூடாது என்ற நியாயமான உண்மையை பளிச்சென்று கன்னத்தில் அறைந்த மாதிரி சொல்லியிருக்கலாம்.

அதையே, கன்னத்தில் தடவிச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்(நாலில் மூவர் முஸ்லீம், ஒருவர் ஹிந்து) திரைக்கதை, வசனகர்த்தாவுக்கு இங்கே இருப்பது புரிகிறது. ஆனால், கிளைமாக்ஸ் வேகத்தை அதுவும் சேர்த்தல்லவா நீர்க்கச் செய்கிறது?

இருந்தாலும், 'இவனைப் போல் நம்மில் எத்தனை பேர்' என்ற ஏக்கம் எழவே செய்கிறது.

மதிப்பெண் : 42 / 100





பின்வாங்கிய நயன்தாரா!

Labels:



ிடீரென்று பின் வாங்கிவிட்டார் நயன்தாரா. முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த

பேட்டியில் ஒரு முக்கியமான விஷயத்தை மறுத்திருக்கிறார். என்னைக் கண்டிக்க ரமலத்துக்கு அருகதை கிடையாது என்று தான் பேட்டியளிக்கவே இல்லை என்று கூறியிருக்கிறார்.


ஏன் இந்தப் பின்வாங்கல்? வேறொன்றுமில்லை. ரமலத் வீட்டுக்கு நாலைந்து பெண்கள் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் போயிருப்பதாகத் தகவல் வந்ததாம் அவருக்கு. ரமலத்துக்கு ஆறுதல் கூறிய அந்தப் பெண்கள் அமைப்பினர், நயன்தாரா எங்கு போனாலும் அவரைச் சூழ்ந்துகொண்டு கேரோ செய்யப் போவதாகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்குத் தொடுக்கப் போவதாகவும் ஆவேசமாகக் கூற, இந்த விஷயமும் அப்படியே நயன்தாரா காதுக்குப் போயிருக்கிறது. அதனால்தான் இனி இதுபற்றிப் பேசவே கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.


இது சம்பந்தமாகக் கேள்வி கேட்க விரும்புகிற பத்திரிகையாளர்கள் பிரபுதேவாவைக் கேட்கட்டும். என்னிடம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டாராம் தெளிவாக.





சினேகா மீது மான நஷ்ட வழக்கு?

Labels:

எல்லாருக்குமே சிநேகாவை பிடிப்பது போல சர்ச்சைகளுக்கும் சிநேகாவை பிடிக்கும் போல...! சினிமாவில் சிநேகா அறிமுகமான புதிதில் டைரக்டர் சுசி.கணேசனுடன் மோதல்! அதன் பின் ஸ்ரீகாந்த்துடன் காதல், கலா மாஸ்டருடன் ஃபைட்டோ ஃபைட், நாக் ரவியுடன் எங்கேஜ்மென்ட், பெங்களூர் ரியல் எஸ்டேட் அதிபர் ராகவேந்திராவின் செக்ஸ் டார்ச்சர், என பலப்பல பரபரப்புகளை கடந்து இப்போது தன்னிடம் சில்மிஷம் செய்ததாக ஒரு அப்பாவியை தர்ம அடி வாங்க வைத்துள்ளார்.

திருச்சியில் உள்ள ஒரு நகைகடையில் (செப்.24) நடந்த விழாவில் சினேகா கலந்து கொண்டார். சினேகா நகைக்கடைக்கு வந்தபோது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக முன்னோக்கி சென்றனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அப்போது நெரிசலில் அங்கிருந்த ஒரு வாலிபர் சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சினேகா இதுபற்றி அங்கிருந்த காவலாளிகளிடம் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை நீலநிற சட்டை போட்டவர் என்று அடையாளம் காட்டினார்.

இதைத்தொடர்ந்து நீலநிற சட்டை அணிந்திருந்த ஒரு வாலிபரை கண்டுபிடித்த காவலாளிகள் அவரை இழுத்து சென்று அடித்து உதைத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த வாலிபர் தாக்கப்படுவதை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், கடை காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் பின்பு தாக்கப்பட்ட வாலிபரையும், கடை காவலாளிகள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் திருச்சி காவேரி நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 34) என்றும், அங்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் என்றும் தெரியவந்தது.

இந்நிலையில் சுரேஷ்குமாரின் மனைவி சர்மிளா கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், நான் எனது கணவரும் 24.09.2009 அன்று காலை சின்னக்கடை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது அங்கு நடிகை சினேகா வந்து இருப்பதாக சொன்னார்கள். அவரை பார்க்கலாம் என்று நான் சொன்னதால் எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தினார். நாங்கள் ரோட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது நகைக்கடையில் வேலை பார்க்கும் 3 பேர் வேகமாக ஓடி வந்து எனது கணவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தார்கள். உடனே நான் சத்தம் போட்டேன். அதன் பிறகு எனது கணவரை விட்டு விட்டனர். எனது கணவரை தாக்கிய 3 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமாரை தாக்கியதாக நகைக்கடை காவலாளிகள் சார்லஸ் (37) அலங்கராஜ் (27) சரவணன் (31) ஆகிய 3 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய சுரேஷ்குமாரின் மனைவி சர்மிளா,

நானும் எனது கணவரும் மோட்டார் சைக்கிளில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றோம். அப்போது ஒரு கடை முன்பு கூட்டமாக இருந்தது.

இதுபற்றி கேட்டபோது நடிகை சினேகா வந்திருப்பதாக கூறினார்கள். உடனே நான், சினேகாவை பார்க்க வேண்டும் என்று கூறினேன். உடனே எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு நின்றார். அப்போது கடையில் இருந்து வந்த 3 பேர்கள் அந்த புளு கலர் சட்டை போட்டவனை புடிங்கடா என கூறிக்கொண்டு ஓடிவந்தனர்.

எனது கணவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். நான் அழுதேன். எதற்காக எனது கணவரை அடிக்கிறார்கள் என்று கேட்ட போது சினேகா புளு கலர் சட்டைகாரணை புடிங்க என்று கூறியதால் பிடித்து அடித்ததாக கூறினார்கள்.

நாங்கள் நின்ற இடத்திற்கும் கடைக்கும் 200 மீட்டர் தூரம் இருக்கும் எனது கணவர் அப்படிப்பட்டவர் இல்லை. அநியாயமாக அவரை சினேகா அசிங்கப்படுத்தி விட்டார்.

சினேகா எங்கே சென்றாலும் இந்த பிரச்சினைதான். அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்து உள்ளேன்.

இச்சம்பவத்தால் எனது கணவர் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். தவறு செய்யாத என் கணவர் மீது தாக்குதல் நடத்த காரணமான, நடிகை சினேகா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன உளைச்சலால் என் கணவர் ஏதாவது செய்து கொண்டால், அதற்கு சினேகா தான் பொறுப்பு என்று சர்மிளா கண்ணீருடன் கூறினார்.





நடந்தவை நடப்பவை-11

Labels:

இந்த மாத துவக்கத்தில் சத்தம் போடாம ஸ்காட்லாண்டின் மேற்கு பக்கம் ஃபிர்த் ஆஃப் க்லைட்-ல் லிட்டில் கம்ப்ரே (Little Cumbrae) என்கிற தீவ சுமார் இருபது லட்சம் பவுண்டுகளுக்கு (£2m), பதஞ்சலி யோக பீடம் என்னும் அறக்கட்டளை நடத்தும் சாம் போத்தார்-சுனிதா போத்தார் தம்பதியினர் வாங்கியுள்ளனர். இந்த தீவை அமைதி (இல்லை சமாதான??) தீவு (Peace Island) என நாமகரணம் செய்து இங்கு யோக குரு ராம் தேவ் அவர்களின் யோகா மையம் செயல் படும் என அறிவித்திருக்கிறார்கள்.

பத்திரிக்கைகளில் பலவாரான செய்திகள் இதை பற்றி. யோகி ராம் தேவ் புற்று நோய் மற்றும் எய்ட்ஸ்க்கான மருந்து விற்பது ஒத்துக்கொள்ள முடியாது, இது ஏமாற்று வேலை என்றெல்லாம் சின்னதாக சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிக்கை செய்திக்கான பின்னூட்டத்தில் ஒரு மண்ணின் மைந்தர் ரொம்ப ஃபீலிங் ஆகி

"I once contemplated buying a small property in India - I was told that as a foreigner I couldn't own anywhere in India. It is sure a sorry day for Bonnie Scotland when one of its islands is allowed to become a spiritual curry restaurant. It would be interesting to see what would happen if the Scottish proposed building anything similar in Rishikesh."

அண்ணா, நீங்க நேரடியா வாங்க முடியாட்டியும் பினாமி பேர்ல வாங்கி உங்க இஷ்டம் போல செய்யலாண்ணா. அது கூட வேண்டாம், நாங்களே ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு இந்தியால இன்னும் மிச்சமிருக்கும் வனப்பிரதேசங்களையும் எதாவது ஒரு யோகா இல்லை ஆன்மீக மையத்துக்காக ஒரு வழி பண்ணீட்டுதான் இருக்கோம்.


வாழ்நாள் சாதனை பட்டம் வாங்க போனவர சோதனையா கைது பண்ணினா எப்படி இருக்கும்??

தெய்வம் நின்று கொல்லும் என்பது போல 31 வருஷம் முன்னாடி 13 வயது சிறுமியுடன் உறவு வெச்சுகிட்ட தப்புக்காக அமெரிக்க போலீஸ் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனரான ரோமன் போலன்ஸ்கியை ஸ்விஸ்ல் வைத்து கைது செய்ததுள்ளது. போலன்ஸ்கியின் சைனா டவுன் படத்தின் இறுதியில் ஒரு புகழ் பெற்ற வசனம் வரும் " Forget it, Jake, Its Chinatown" என்று, இப்படி அமெரிக்க போலிசும், "Foget it, Polanski, it is Swiss" போனா போகுதுன்னு விட்டுருவாங்கன்னு நினச்சுட்டாரு போலருக்கு.



(கள்ள)காதல் கொடுத்த பரிசு!

Labels:

விதி வழியோட போனாலும் வில்லங்கம் விருந்து வச்சு அழைக்குமாம். அப்படி ஆகியிருக்கு நயன்தாரா நிலைமை. பிரபுதேவாவுடனான கள்ள காதலை முறித்துக் கொண்டு அவரிடமிருந்து விலகிக் கொண்டதாக அறிவிக்கணும். அப்படி இல்லேன்னா நயன்தாரா படங்கள் ஓடும் தியேட்டர்கள் முன்பாக போராட்டம் பண்ணுவோம் என்று அறிவித்திருக்கிறது மாதர் சங்கங்கள்.

ஏதோ நாலு பேரு ஒண்ணா சேர்ந்து கத்துறாங்க. நம்மை என்ன செய்ய முடியும்? என்று அலட்சியமாக போய்விட முடியாது நயன்தாரா. ஏனென்றால் மாதர் சங்கங்களின் மகிமை என்ன என்பதை கடந்த காலங்களில் உணர்த்தியிருக்கிறார்கள் பல விஷயங்களில். எனவே நயன்தாரா பிரபுதேவா விவகாரத்தில் அது சீரியஸ் ஆகாமல் பார்த்துக் கொள்வது இரு தரப்புக்குமே நல்லது.

இதற்கிடையில் பெங்களூர் மற்றும், மும்பையிலேயே தங்கியிருக்கும் பிரபுதேவா, சென்னைக்கு வருவதையே தவிர்த்து வருகிறாராம். வந்தால் மனைவிக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற அச்சம்தான் காரணம். ஆனால் போனிலேயே தனது அதிருப்தியை வெளியிட்டதோடு இப்படி மீடியாவிடம் பேசி மானத்தை வாங்குறியே என்றும் கடிந்து கொண்டாராம்.

தலைக்கு மேலே போய்விட்டது. இனிமேலும் அமைதியாக இருந்தால் குல்லாதான் மிஞ்சும். எனவே போராட்டத்தை வலுவாக்குவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் ரமலத். இதற்கிடையில் சென்னையில் 28 ந் தேதி நடைபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவெடுத்திருந்த கள்ளக்காதல் தம்பதி அந்த திட்டத்தையே கைவிட்டு விட்டார்களாம்.

கமல்ஹாசனுக்கு எடுக்கப்படும் இந்த விழாவில் இந்த தம்பதிகள் கலந்து கொண்டால் நிகழ்ச்சியின் நோக்கம் திசை மாறக் கூடும். அது கமலுக்கு பெருமை சேர்ப்பதாக அமையாது என்பது தொலைக்காட்சி நிர்வாகத்தின் கணிப்பு. எனவே அவர்கள் தரப்பிலிருந்தே இந்த கள்ளக்காதல் தம்பதிகளுக்கு "வராதீர்கள்" என்று செய்தி போயிருக்கிறதாம்.

(கள்ள)காதல் கொடுத்த பரிசை பார்த்தீங்களா?




நம்பர் 1 தமிழ் சினிமா !

Labels:

1920-ல் துவங்கி காந்தி சுடப்பட்ட தினத்தோடு முடியும் "காஞ்சிவரம்' சினிமா, என் ஒன்பது வருஷ கனவு. பங்கெடுத்த அத்தனை பட விழாக்களிலும் காஞ்சிவரத்துக்கு கிடைத்த வரவேற்பு, கௌரவம் இதுவரை நான் செய்த படங்களுக்குக் கிடைக்கவில்லை.


இப்போது அதற்கு மணி மகுடமாக தேசிய விருதும் கிடைத்திருக்கிறது. கண்ணீர் துளிர்த்து நின்ற தருணங்களை மறக்க முடியாது என தேசிய விருது தந்த மகிழ்ச்சியில் பேசுகிறார் இயக்குநர் பிரியதர்ஷன்.

"காஞ்சிவரம்' எப்படி நடந்தது இது?
சினிமாவில் எனக்கான ஓர் அங்கீகாரத்தை பெற வேண்டும் என இயங்கத் தொடங்கியதில் இருந்தே இதன் கரு எனக்குள்ளே உருவாகியிருந்தது. ஆனால், மும்பை பர்சத் பிக்சர்ஸ் கம்பெனியின் மூலம்தான் பலிக்கணும்னு இருந்திருக்கு.

காஞ்சிபுரம் பற்றிய ஆராய்ச்சிகளில் இறங்கினால் கூடைக் கூடையாய் அவ்வளவு செய்திகள். ஆயிரம் கோயில்கள் அங்கே இருந்திருக்கு.

இப்ப அதற்கான தடயங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. காஞ்சிபுரத்தின் அசல் மொழி எனக்குத் தெரியாது.

ஆனால், அதன் ஆன்மா புரியும். கார்ட்டூனிஸ்ட் மதன் அதற்கு பெரிதும் உதவினார். 1920-ல் இருந்த காஞ்சிபுரத்தைக் கண் முன்னால் உலவ விட்டார் சாபுசிரில். உலகம் புரிந்து கொள்ளாத பிரகாஷ்ராஜின் அபூர்வமான மறுபக்கம் பிரமிப்பாகப் பதிவாகியிருந்தது.

இதை ஆர்ட் பிலிம் என்று சொல்லி விட முடியாது. அர்த்தமுள்ள சினிமாங்கிற வார்த்தைதான் சரி




ஐ.சி.சி சாம்பியன் திரோபி - பாகிஸ்த்தானிடம் வீழ்ந்தது இந்தியா !

Labels:

ஐசிசி நடத்தும் சாம்பியன் கிண்ணப்போட்டிகளில் குழு A பிரிவில், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்திய பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், சொயிப் மலிக்கின் அதிரடி சதத்தால் பாகிஸ்த்தான் அபார வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி, ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. ஆஷஸ் நேஹ்ரா அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஆனால் மலிக், யூசப் ஜோடி களமிறங்கியதும், ஆட்டம் சூடுபிடித்தது. அதிரடியாக ஆடிய சொஹிப் மலில் 16 பவுன்றிகள் அடங்களாக 126 பந்துகளில் 126 ஓடங்களை எடுத்தார். மொஹ்மட் யூசப் 87 ஓட்டங்களை எடுத்தார்.

65 ரன்களுக்கு மூன்றாவது விக்கெட் வீழ்ந்திருந்தது. அடுத்த விக்கெட் 271 ஓட்டங்கள் பெற்றிருந்த போதே வீழ்ந்தது. யூசப் அவுட்டாகியதும், 'சச்சின் தமக்கு ஒரு பொருட்டே இல்லை என பேட்டியளித்த அப்ரிடி களமிறங்கினார். ஆனால் 0வந்த வேகத்திலேயே பவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்தவர்கள் யாவரும் குறைவான ஓட்டங்களையே பெற்றிருந்த போதும், மலிக்கின் சதத்தினால், 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்த்தான் அணி, 302 ஓட்டங்களை குவித்திருந்தது.

பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் சச்சின் வந்த வேகத்திலேயே பவிலியன் திரும்பினார். இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த ட்ராவிட், கம்பீர் ஜோடி இந்தியாவிற்கு நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் கௌதம் கம்பீர் தனது அரைச்சதத்தை பூர்த்தி செய்த போது, ஆட்டமிழக்க நேரிட்டது. அடுத்தடுத்து வந்தவர்கள் பிரகாசிக்கத்தவறிய போதும் ஒரு பக்கம் ட்ராவிட் மட்டும் நிதானமாக துடுப்பெடுத்தாடி வந்தார்.

சுரேஷ் ரைனா, ட்ராவிட்டிற்கு கைகொடுக்க வந்தார். ஆனால் 46 ஓட்டங்களை பெற்றிருந்த போது அவரும் ஆட்டமிழந்தார். இந்தியாவின் தோல்வி உறுதியானது. 44.5 ஓவர்கள் முடிவில் சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்களை மாத்திரமே இந்தியாவால் எடுக்க முடிந்தது.

டிராவிட் மட்டும் அதிகூடிய ஓட்டமாக 78 ஓட்டங்களை குவித்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகனாக சொஹிப் மலிக் தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை குழு A பிரிவில் நடைபெற்ற மற்றுமொரு ஆட்டத்தில் அஸ்திரேலியா அணி, 50 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியினை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று நியுசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையே ஒரு போட்டியும், இங்கிலாந்து-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே மற்றுமொரு போட்டியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.





விஜய் நடித்திருக்க வேண்டிய முதல்வன்- ஷங்கர்.

Labels:




அண்மையில் தான் இளைய தளபதியின் வேட்டைக்காரன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. பாடல்களும் பட்டையை கிளப்ப ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் அந்த விழாவிற்கு வந்திருந்த பல பிரபலங்களும் விஜயையும் வேட்டைக்காரனையும் வாழ்த்திப் பேசியதுடன் சில பழைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

விழாவிற்கு
அழைக்கப்படிருந்த சிபிராஜ் சன் பிக்சர்சும் விஜயும்
கைகோர்த்திருக்கின்றார்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் என வாழ்த்தினார்.
அடுத்து கருணாசும் மேடையில் அழைக்கப்பட்டு பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து வேட்டைக்காரி வந்தார் வந்தவர் கொஞ்சும் தமிழில் பேசியது
பாராட்டுக்குரியது. பல தமிழ் நடிகைகளே தமிழில் பேச தள்ளாடும் நேரம் இந்த
யோகா டீச்சர் தமிழில் பேசியது பாராட்டுக்குரியது.(விடுங்கப்பா நாலு
வார்த்தை தமிழில் பேசினாங்க அதை தான் சொன்னேன்.) அதற்காகவே அவரின் தாராள
மனதை சொல்லும் படம். இங்கே.

தொடர்ந்து வந்து பேசிய இயக்குனர் ஷங்கர் விஜய்க்கு வாழ்த்து சொல்லிவிட்டு,
எந்திரன் படத்தை பற்றியும் பேசினார். அதை தொடர்ந்து நீண்டநாட்களாக இருந்து
வந்த சந்தேகம் ஒன்றையும் போட்டு உடைத்தார். ஏற்கனவே தெரியும் முதல்வன்
திரைப்படம் ரஜினிக்காக எழுதப்பட்ட கதை அந்த நேர அரசியல் சூழ்நிலை காரணமாக
ரஜினி நடிக்காமல் போக அர்ஜூன் நடித்து படம் பெற்ற வெற்றி. ஆனால் ரஜினிக்கு
அடுத்து தன்னுடைய தெரிவு விஜய் தான் என இதுவரை மெளனம் காத்து வந்த ஷங்கர்
வெளிப்படையாக சொல்லிவிட்டார். முன்பொருமுறை இதை விஜய் சொல்லி எள்ளி
நகையாடிய அத்தனைபேரின் மூஞ்சியிலும் கரி பூசப்பட்டு விட்டது. தொடர்ந்து
பேசிய ஷங்கர் தானும் விஜயும் ஒரே பள்ளியில் இருந்து அதாவது எஸ்.ஏ.சியின்
பள்ளியில் இருந்து வந்தவர்கள் ஏழு வருடம் அவரிடம் உதவி இயக்குனராய்
இருந்து இருக்கின்றேன். விரைவில் விஜயை வைத்து படம் செய்யும் திட்டம்
உண்டு என் குருநாதர் மகன் என்பது மட்டுமல்ல அவர் ஒரு திறமையான நடிகர் அவர்
ஆட்டம் எந்த இடத்திலும் பிசிறு தட்டாது என சொல்ல அரங்கமே அதிர்ந்தது.
தொடர்ந்து விஜயும் பல பிரமுகர்களும் இந்த நிகழ்வில் பேசினார்.

Labels: ஏ.வி.எம்., விஜய் ஷங்கர், வேட்டைக்காரன்




வில்லனாக மாட்டேன் - ஜீவன்

Labels:

இனி வில்லனாக மாட்டேன் - ஜீவன்

நான் அவன் இல்லை-2, கிருஷண லீலை இரண்டு படத்தின் என அடுத்தடுத்து ரிலீசுக்காக காத்திருக்கிறார் ஜீவன்.


மீண்டும் 5 ஹீரோயின்களோடு நடிச்சிருக்கீங்க?


ஏற்கெனவே ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான படம்தான் நான் அவன் இல்லை. அதில் 5 ஹீரோயின்கள் நடிச்சிருந்தாங்க. அதை ரீமேக் செய்யும்போது அதேபோல 5 பேரை நடிக்க வைச்சோம். கிளாமருக்காக நாங்க 5 கேரக்டர்களை திணிக்கலை. அந்தப் படம் சூப்பர் ட்டாச்சு. அதனால அதோட 2-வது பாகத்தை எடுத்திருக்கிறோம். முதல் பாகம் முடிஞ்ச இடத்துலயிருந்து ரெண்டாவது பாகம் தொடங்குது. இந்த முறை வெளிநாடுகளுக்கு போயிட்டு ஹீரோயின்களை ஏமாத்துற கேரக்டர். அதுக்கு 5 ஹீரோயின்கள் தேவைப்பட்டாங்க.



5 பேரில் உங்களுக்கு பிடிச்ச நடிகை?


வம்புல மாட்டிவிடப் பாக்குறீங்க. எனக்கு 5 பேருமே பிடிக்கும். காரணம், அவங்க வந்தோம், போனோம்னு இதுல நடிக்கலை. டான்ஸ்ல காட்டுற ஆர்வத்தை விட நடிப்புல காட்டியிருக்காங்க. 5 பேரும் சின்சியரா உழைச்சிருக்காங்க. ஒவ்வொரு கேரக்டரா மாறி, அவங்களை ஏமாத்துறேன். அதனால என¢னோட நடிப்புத் திறமையை காட்டவும் படம் உதவியிருக்கு.



கிருஷ¢ணலீலை?


இந்த தலைப்பை பார்த்ததும் காதல் படம¢னு நினைக்கிறாங்க. அதுக்கு எதிர்மாறா இருக்கும். எப்போ எல்லாம் அதர்மம் தலைதூக்குதோ அப்போலாம¢ கிருஷ்ணனோட லீலை ஆரம்பமாகும்னு கீதையில வருது. இந்த படக்கதையும் அதுதான். லீலைங்கிறது இந்த பட ஹீரோவை பொருத்தவரை யுத்தம்னு அர்த்தம். ஸெல்வன் இயக்கியிருக்கிறார். பெங்களூரைச் சேர்ந்த மேக¢னா, ஹீரோயின்.



நீங்க நெகட்டிவ் ஹீரோவா நடிக்கிற படங்கள்தான் ஓடுதுங்கறாங்களே?


அப்படி கிடையாது. திருட்டுப் பயலே படத்துல எல்லோருமே தப்பு பண்றாங்க என்பதுதான் கதையே. அதுல தப்பு பண்றவன் கடைசியில என்ன ஆகுறான் என்பதுதான் முக்கியம். Ôநான் அவன் இல்லைÕ படத்துல நான் வில்லன் கிடையாது. தங்களோட பேராசைகள் காரணமா, 5 பெண்களும் ஏமாறிப்போறாங்க. அவ்வளவுதான். நெகட்டிவ்னா கொடுமைக்காரனா நடிக்கணும். நான் அப்படி நடிக்கலை. நான் நல்லவனா நடிச்ச தோட்டா ட்டாச்சே.



சரவெடி என்னாச்சு?


ஜான் மகேந்திரன் இயக்க இருந்தார். நல்ல கதை. அமர்க்களமா ஆரம்பிச்சோம். பிறகு என்ன பிரச்னைங்கிறதே எனக்கும் ஜானுக்கும் தெரியாது. தயாரிப்பாளரைத்தான் கேட்கணும்.



திரும்ப வில்லன்?

இப்போதைக்கு அந்த எண்ணம் கிடையாது. ஹீரோவாகவே நடிப்பேன்.



நடிகைகள் சேலையில்..

Labels:

















விஜய் உச்சத்துக்கு வரமுடியும்!

Labels:

ரஜினியின் வழியைப் பயன்படுத்திக் கொண்டால் விஜய் உச்சத்துக்கு வரமுடியும் என்றார் சன் பிக்சர்ஸ் தலைமைச் செயல் நிர்வாகியும், எந்திரன் 10002_1படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளருமான ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா.

ரஜினிதான் என் தலைவர், நான் என்றும் அவரது ரசிகன் என்று கூறிவந்தவர் விஜய். அதுமட்டுமல்ல… ஒரு ஆக்ஷன் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள பல அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை ஆரம்ப காலம்தொட்டே ரஜினியிடம் பெற்றுவந்தவர் விஜய். குருவி படத்தில் ஒரு பாடலில் என் வாத்தியார் சூப்பர் ஸ்டார் என்று பாடுவார். கில்லி வெற்றி விழாவில் விஜய்யை தன் ரசிகன் என்று சொல்லி ரஜினி ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு சாப்ட் கார்னரை ஏற்படுத்தித் தந்தவர் ரஜினி.

ஆனால் ஏசி சண்முகம் கொடுத்த ஒரு டாக்டர் பட்டமும், அதைத் தொடர்ந்து லயோலா கல்லூரி நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் ஏதோ முக்காலே மூணு சதவிகிதம் செல்வாக்கு உயர்ந்திருப்பதாகக் கூறப்பட்டதும் அவரது மனநிலையை தலைகீழாக மாற்றிவிட்டது போலும்… விளம்பரம், போஸ்டர்கள், பேனர்கள் என சுய விளம்பரத்தில் இறங்கியவர், ரஜினி ரசிகர்களைச் சீண்டிப் பார்க்கும் விதத்தில் சில வார்த்தைகளை அவற்றில் இடம்பெறச் செய்ய, தானாகவே ஒரு கேலிப் பொருளாக மாறிவிட்டார்.

அவர் மதிப்பை யாரும் தாழ்த்தவில்லை.. தானாகவே தாழ்த்திக் கொண்டார். வர வேண்டிய இடத்திலிருந்து வந்தால்தான் அது மரியாதை. செட்டப் செய்வதால் அவமானம்தான் மிஞ்சும்.

இதையெல்லாம் உணர்ந்துதானோ என்னமோ, வேட்டைக்காரன் பட பாடல் வெளியீட்டு விழாவில் விஜய்யைப் பார்த்து இப்படிச் சொன்னார் ரஜினியின் தீவிர ரசிகர்களுள் ஒருவரான ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா…

“சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து பெரிய பெரிய படங்களை வெளியிடத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டு முதல் எங்கள் அணுகுமுறை, படங்களைத் தேர்வு செய்யும் விதம் என எல்லாமே மாறப்போகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ படம்தான் சன் பிக்சர்ஸின் நேரடி முதல் தயாரிப்பு. எந்திரன் படத்தை கலாநிதி மாறன் மிகுந்த நம்பிக்கையுடன் தயாரிக்கிறார். அதற்கு ஏற்ப ஷங்கரும் அவரது குழுவினரும் தங்கள் படம் போல் உழைக்கிறார்கள். அடுத்த ஆண்டு இப்படம் வெளிவரும்.

இந்தப் படத்துக்கு இயக்குனர் ஷங்கர் கடினமாக உழைத்து வருகிறார். அதை பார்க்கும்போது எனக்கு பெரும் வியப்பாக இருக்கிறது.

ரஜினியின் உழைப்பு ஒரு பிரமிப்பு. இன்னும் பல காலத்துக்கு அதைப் பற்றி இந்த திரையுலகம் பிரமிப்புடன் சொல்லிக் கொண்டுதான் இருக்கும். ரஜினி சாரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைய நடிகர்கள், இளைஞர்களை அனைவருமே அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.

ரஜிprimary-large-1னியின் வழியை விஜய் பயன்படுத்திக்கொண்டால் உச்சத்துக்கு வர முடியும்…,” என்றார் சக்ஸேனா.

இந்த மேடையில் பேசிய இயக்குநர் ஷங்கர், எந்திரன் படம் 85 சதவிகிதத்துக்கும் மேல் முடிந்துவிட்டதாகவும், இறுதிக் கட்டப் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், “எப்போது விஜய்யை வைத்து படம் இயக்கப்போகிறீர்கள் என்று வெளியூர் சென்றாலும் ரசிகர்கள் கேட்கிறார்கள். ‘முதல்வன்’ படத்தில் முதலில் நடிக்க வைக்க எண்ணியது ரஜினியை. அவர் கிடைக்காவிட்டால் விஜய்யை வைத்து இயக்க நினைத்தேன். தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது.

விஜய்யை எல்லாருக்கும் பிடிக்கிறது. நான் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் 7 வருடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். விரைவில் விஜய்யை வைத்து படம் செய்யும் திட்டம் உள்ளது. என் குருநாதர் மகன் அவர் என்பதால் மட்டுமல்ல… அவர் திறமையான நடிகர்… அவர் ஆட்டம் எந்த இடத்திலும் பிசிறு தட்டாது…,” என்றார்.

பின்னர் பேசிய விஜய், வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் சிலவற்றைப் பாடிக் காட்டினார்.

“நான் அடிச்சா தாங்கமட்டே
நாலு மாசம் தூங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே…”

-இப்படிப் போகின்றன அந்தப் பாடல் வரிகள்…!!

இந்தப் பாடலைக் கேட்டுவிட்டதால்தான் சக்ஸேனா அப்படிப் பேசினாரோ!!





நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை.

00000145

ஐரோப்பிய வரலாற்றில் என்றும் நடைபெறாத வகையில் சுமார் நூறு கோடி சுவீடிஸ் குறோணர்களை பணவைப்பு களஞ்சியத்தில் இருந்து திருடர்கள் திருடிச் சென்றுள்ளார்கள். திருடப்பட்ட பணத்தொகை பெரிய விடயமல்ல திருடப்பட்ட முறையே உலகை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

இன்று புதன் அதிகாலை உலங்குவானூர்தி ஒன்றைக் கடத்திவந்த கொள்ளையர்கள் உலங்குவானூர்தியில் இருந்து கயிற்றில் வழியாக இறங்கி களஞ்சியத்தின் முகட்டை உடைத்து ஜி.45 என்ற டிப்போட் பகுதியில் இருந்து பணத்தை திருடியுள்ளனர். இவர்கள் கொண்டுவந்த உலங்கு வானூர்தியை ஓட்டிய விமானி சாதாரணமான ஒருவரல்ல என்று கூறப்படுகிறது. இராணுவத்தில் பயிற்சி யெடுத்த ஒருவராகவே இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதில் பலர் பங்கேற்றுள்ளனர், அனைவருமே மிகவும் பயிற்றப்பட்ட நபர்களாக உள்ளார்கள். சாதாரண திருடர்களால் செய்ய முடியாத அபார சாதனை இதுவாகும். பயங்கரமான ஆயுதங்களை பாவித்து இதைச் செய்துள்ளார்கள். இதற்காக விசேட முகமூடிகளையும் அணிந்துள்ளார்கள்.

இந்தச் சம்பவம் சுமார் 22 நிமிட நேரத்திற்குள் நடந்து முடிந்துள்ளது. உலங்குவானூர்தி சுவீடிஸ் தலைநகர் ஸ்ரொக்கோமில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் காட்டுப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பணத்தையும் திருடியவர்களையும் கண்டறிய முடியவில்லை. இதன் பின்னர் போலீசார் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர், ஆனால் இவர்களா சந்தேக நபர்கள் என்பதை போலீஸ் ஊர்ஜிதம் செய்யவில்லை.

இந்தக் கொள்ளையைக் கண்டு பிடிப்பதற்காக பெருந்தொகையான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சகல ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளிலும் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 100 சந்தேக நபர்களின் பெயர் அட்டவணை தயாரிக்கப்பட்டு அனைவரையும் தேடி வலை விரித்துள்ளனர் போலீசார். உலங்குவானூர்தியை செலுத்தியவர் கட்டிடத்திற்கு மிகவும் அருகருகாக அதை அந்தரத்தில் நிறுத்தியுள்ளார். ஒரு சில மீட்டர் இடைவெளியில் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது. ஓர் ஆக்சன் திரைப்படத்தில் வருவதுபோல காரியம் நடந்தேறியுள்ளது.





திரு.. திரு.. துறு.. துறு- திரை விமர்சனம்

Labels:




ரொம்ப நாளாச்சு இவ்வளவு லைட்டான திரைகதையில், பரபரவென, ஸ்லாப்ஸ்டிக்கும், ஒன்லைனரும், கலந்து அடிக்கும் ஒரு லவ்லி கூத்தை..

ஒரு பர்பெக்ட் பெண் ரூபா மஞ்சரிக்கும், அன் பெர்பெக்ட் அஜ்மலுக்கும் இடையே நடக்கும் ரசிக்கும் படியான கதை.அஜ்மல் ஒரு விளம்பர கம்பெனியின் ஆர்ட் டைரக்டர், விஷுவலைசர், ரூபா அவனுடன் வேலை பார்க்கும் பெண், மெளலிக்கு பிள்ளைகள் இல்லாததால் செல்லப் பிள்ளையாய் அஜ்மல் இருக்க, அவனின் பொறுப்பற்ற தன்மையால் ஒரு மிக பெரிய கார்பரேட் கம்பெனியின் ஆர்டர் கைநழுவி போக இருக்க, அதை இழுத்த் பிடித்து ரூபாவும், அஜ்மலும் பிடித்து வேலையை ஆரம்பிக்க, அது ஒரு குழந்தைகளுக்கான ப்ராடக்ட், அதற்கான குழந்தை கிடைக்காமல் போக, ஒரு குழந்தையை அஜ்மல் கண்டுபிடிக்க, அந்த குழந்தையின் தாயிடம் அனுமதி வாங்க துரத்த, அவள் ஒரு ஆட்டோவில் அடிபட்டு மயக்கமாக, குழந்தை அஜ்மலிடம் இருக்க, திரும்ப போகும் போது குழந்தையின் அம்மா காணாமல் போயிருக்க, ப்ளாட் இறுகுகிறது.

அதன் பிறகு நடக்கும் கூத்துக்கள், மிக இயல்பான ஸ்லாப்ஸ்டிக் காமெடி.. குழந்தையின் தாய் தகப்பனை தேடி பிடிகக் அலைய, காணாமல் போனவள் ஒரு டுபாக்கூராய் இருக்க, அவள் பின்னால் ஒரு பெரிய கும்பல் இருக்க, ஒரு பக்கம் ஒரிஜினல் அப்பா அம்மா அலைய, அக்ரிமெண்ட் கிடைககாமல் மெளலி டென்ஷனாகி இருக்க, அவரிடம் உண்மையை சொல்லாமல் காரிய முடிக்க முயலும் ரூபா, அஜ்மல் ஜோடி, இதற்குள் அவர்களுக்குள் உண்டாகும் காதல். என்று ஒரே ஜாலிதான்.

அஜ்மலுக்கு மிக இயல்பாய் காமெடி வருகிறது.. பொறுப்பில்லாத ஒரு கேர்ஃபிரி இளைஞனை கண் முன்னே நிறுத்துகிறார். அதே போல் ரூபா மஞ்சரி. முதல் காட்சிகளில் பார்க்கும் போது சுமாராய் இருப்பவர், படம் முடியும் போது அவரை பிடிக்க ஆரம்பித்துவிட்டது.. அவ்வளவு இயல்பான கேர்ள் நெக்ஸ்ட் டோர் இம்பாக்ட்.. இவருக்கும் ரியாக்‌ஷன்கள் இயல்பாய் வந்து உட்காருகிறது.

மெளலி தான் ஒரு எக்ஸ்பீரியன்ஸ்டு ஆர்டிஸ்ட் என்பதை வரும் காட்சிகளில் எல்லாம் நிருபித்து காட்டுகிறார். டென்ஷனான நேரட்த்திலும் ஜோக்கடித்து கொண்டே, முகத்தில் மட்டும் டென்ஷனை காட்டும் காட்சிகள், ஆளை தவிர பேரை எப்போதுமே மாற்றி, மாற்றி சொல்லும் அவரின் கேரக்டர் அருமை.

தமிழில் வந்திருக்கும் மூன்றாவது ரெட் ஒன் டிஜிட்டல் படம். அவ்வளவு துல்லியம்.. ஒளிப்பதிவாளர் சுதிர் பாராட்ட பட வேண்டியவர்.. அருமையான பேக்ரவுண்ட் கலர்ஸ், துல்லியமான ஒளிப்பதிவு என்று கலக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் மணிசர்மாவின் பாடல்கள் ஓகே. ஜில்லுனு வீசும் பூங்காற்று பாடல் மட்டும் நல்ல மெலடி.

கதை, திரைகதை,வசனம், எழுதி இயக்கி இருக்கும். ஜே.எஸ்.நந்தினிக்கு முதல் படம்.. பார்த்தால் தெரியவில்லை. மிக இயல்பான டயலாக்குகள், ஒன்லைனர்கள், ஆர்டிஸ்டுகளிடம் வேலை வாங்கியிருக்கும் பாங்கை பார்த்தால் நிச்சயம் தெரியவில்லை.. ஆரம்பித்த முதல் பத்து நிமிஷத்துக்கு வழக்கம் போல இரண்டு பேருக்கான ஈகோ க்ளாஷ் என்று நினைத்து கொண்டிருக்கும் போது, குழந்தையை கொண்டு வந்து திருப்பத்தை ஏற்படுத்தி, அதற்கப்புறம் ஸ்பீடுதான்.

ஆங்காங்கே பல இடங்களில் திரைக்கதை தொங்கினாலும் பின்னால் வரும் சில காட்சிகள் அதை ஈடு கொடுத்து சரி செய்து விடுகிறார். குழந்தை திருடி நர்ஸை தர்ட் டிகிரி மெத்தடில் விசாரிக்கும் காட்சி செம ரகளை.. க்ளைமாக்ஸில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல காமெடி கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்பை மிஸ் செய்து விட்டார்.





ACTRESS PRIYANKA CHOPRA HOT SEXY SIZZLING PHOTO GALLERY

Labels:

priyanka-chopra-hot2.jpgpriyanka-chopra-hot3.jpgpriyanka-chopra-hot4.jpgpriyanka-chopra-hot5.jpgpriyanka-chopra-hot7.jpgpriyanka-chopra-hot8.jpg




ஸ்ரீதேவி புதிய கலர்புள் கவர்ச்சி

Labels:

sridevi-and-vidyabalan-1.jpgsridevi-and-vidyabalan4.jpgsridevi-and-vidyabalan5.jpgsridevi-and-vidyabalan6.jpgsridevi-and-vidyabalan-1.jpgsridevi-and-vidyabalan9.jpgsridevi-and-vidyabalan7.jpgsridevi-and-vidyabalan8.jpg




அசத்தலான அசல் கதை ஒரு கற்பனை !

Labels:



காட்சி 1:
(இடம் : நெதர்லாந்து நாட்டில் உள்ள Amsterdam மாநகராட்சி அலுவலகம்)
Amsterdam கவுன்சிலர் திரு.பீட்டர் வட்ட மேஜையின் நடுவில் உட்கார்ந்து இருக்கிறார்.
அவருக்கு இருபுறமும் மாநகராட்சி ஊழியர்களும் contract எடுப்பவர்களும் உட்கார்ந்து இருக்கின்றனர்.அனைவரது முன்பும் froster mini beer வைக்க பட்டுள்ளது. அந்த contract கூட்டத்தில்
வில்லன் கோஷ்டியின் வலது கையான SRIMAN உட்கார்ந்து இருக்கிறார். வில்லன் கோஷ்டியின் கண்களில் ஒரு வெறி தெரிந்தது, எப்படியும் இந்த தடவை நம்ம BOSSku contract வாங்கிடனும் என்று
கவுன்சிலரை கரெக்ட் செய்து விட்டார்கள்.

காட்சி 2:
சில நாட்களுக்கு முன்பு:
(இடம்: amsterdam பார்க் ஓரம் இருக்கும் பப்ளிக் restroom)
SRIMAN தன் சகாக்களுடன் அந்த RESTROOMil நுழைகிறார்கள். ஸ்டோர் ரூம் சென்று அங்கிருக்கும் PHENOYIL BOTTLEil நம்ம NAPOLEAN சரக்கை கலந்து விடுகிறார்கள். அந்த MIXED PHENOYILai ஊற்றி
அங்குள்ள ஊழியர்கள் கழுவி விடுகிறார்கள். ரெஸ்ட்ரூம் முழுதும் சரக்கு நாத்தம்.அதனால் அந்த பழைய contract CANCEL செய்து அதை வில்லனுக்கு சாதகமாக மாற்றுவதற்கு மாநகராட்சி அலுவலகத்தில் கூடியுள்ளனர்.

காட்சி 3:
(இடம் : அதே மாநகராட்சி அலுவலகம் )

கேமரா கட் SHOTil ஒருவர் கோட் சூட் உடன் வாயில் ஒரு சுருட்டு கையில் ஒரு பை அதனுள் சில உயர் ரக PHENOYIL BOTTLEgal.
அப்புறம் X-MEN படத்தல வர HUGH JACKMAN மாதிரி ஒரு கிரிதாவுடன் உள்ளே நுழைகிறார். அவர் தான் நம்ம தல அஜித், அப்படியே அலுவலகம்
உள்ளே முன்னும் பின்னும் நடக்கிறார்...நம்ம பரத்வாஜ் உடனே ஒரு இங்கிலீஷ் பாட்ட BACKGROUNDla போடுறார். ஒரு பத்து தடவ உள்ளே நடக்கிறார் .

கவுன்சிலர் கடுப்பாகி தன் ஊழியர்களிடம்

கவுன்சிலர்: டேய் யாருடா அது இங்கே வந்து FASHION SHOW காட்டறது..போப்பா பக்கத்துக்கு பில்டிங்கலதான் FASHION SHOW நடக்குது...சும்மா இங்க வந்து சீன் போட்டுட்டு இருக்க.

தல: நான் தான் தல.. என் பின்னாடி 6 கோடி பேர் இருக்காங்க.

கவுன்சிலர்: ஓ! முன்னால் CONTRACT காரரா... சரி ஏன் இவளோ BUILDUP ?

தல: எல்லாரும் என்ன TREND SETTERnu சொல்வாங்க. அதான் இப்படி, அதனால உனக்கென்ன?

கவுன்சிலர்:சரி விடுங்க தல..நீங்க பாட்டுக்கு உனக்கென்ன உனக்கென்ன பாட்டு பாடிர போறீங்க. அப்புறம் மீட்டிங் கான்செல் ஆயிடும்.

காட்சி 4:
( சந்தானம் உள்ளே நுழைகிறார்)

சந்தானம்: ஏய் கவுன்சிலர் தல கிட்டயே மோதி பாக்கறியா அவரு யார் தெரியுமா, இந்தியாவுல
நாலு வருஷம் முன்னாடி "SUPERSTAR நாற்காலி எனக்கு வேணும்னு" சொன்னவர்டா.

கவுன்சிலர்: SUPERSTAR நாற்காலி கிடைச்சிதா?

(தல பேச போகுமுன் சந்தானம் குறிக்கிட்டு)

சந்தானம்: ROYAPETTAa மார்கெட்ல ஒரு வராம் தேடி பாத்தாரு ஒரு சந்தன நாற்காலி கூட அவருக்கு கிடைக்கல.

தல கடுப்பாகி: மழை நிக்கறதுக்குள்ள!!!!!! contract எனக்கு திரும்பி குடுக்கணும்.

சந்தானம்: மழை பெய்யல தல

தல: எப்போ மழை பெய்தோ அது நிக்கறதுக்குள்ள. அது!!!!!!!!!!!!!!!.

இப்போ தல கிட்ட AMSTERDAMla நாய் புடிக்குற CONTRACT MATTUM THAAN இருக்கு.
ஒரு நாள் நாய் புடிக்கும் பொது சமீராவோட நாயையும் பிடித்து, அப்புறம் ROMANCE ஆகி
அது ஒரு தனி TRACK.

காட்சி 5:
(இடம்: AMSTERDAM COURT)
தல தனக்கு மீண்டும் ரெஸ்ட்ரூம் CONTRACT வேண்டி COURTil கேஸ் போட்டுள்ளார்.நீதிபதியாக நமது கவுண்டமணி.

கவுண்டமணி. : டேய் டகால்டி உன் பேர் என்ன?

தல: என்னை தெரிஞ்சவங்க தலன்னு சொல்வாங்க, புரிஞ்சவங்க நல்லவன்னு சொல்வாங்க

நீதிபதி கவுண்டமணி. குறிக்கிட்டு: யோவ் அதெல்லாம் எனக்கு தேவை இல்லாதது...ஐயோ ராமா ஏன் இந்த களிசடையோட என்ன கூட்டு சேர உடுற.உன் பேர் என்ன அத சொல்லு?

தல: CITIZEN என்று உறுமுகிறார்.

நீதிபதி: அடி கோன்னியன் என்னைய வாட்ச் கம்பெனி பேர்லாம் சொல்லிட்டு இருக்க. சரி அத உடு ஏன்யா கக்கூஸ் கழுவுற PHENYOILla சரக்கை கலந்திங்க?

தல: நோ நான் கலக்கலா MY LORD

கவுண்டமணி: அப்போ வேற யாரு TELL ME TELL ME NOW.

தல: நான் வாங்கறது ஊத்தறது கழுவறது எல்லாமே அசல் PHENOYIL
சார்.

கவுண்டமணி.: இவரு பெரிய G.D.NAIDU, எல்லாம் அசல் PHENOYILam
narayana இந்த கொசு தொல்லை தாங்கலைடா. டேய் ஆப்ப மண்டையா இப்ப என்னதாண்டா சொல்ல வர.....

தல: என் எதிரியின் மாமன், மாமி , அண்ணன் அண்ணி ,சித்தப்பன் சித்தி, பெண் கொடுத்தோர் பெண் எடுத்தோர்

கவுண்டர் குறிக்கிட்டு: இவங்களை எல்லாம் உன் கூட வந்து கக்கூஸ் கழுவ சொல்லனுமா?

தல: கொஞ்சம் மரியாதையா பேசுங்க.நானும் பெரிய தொழிலதிபர்

கவுண்டமணி.: அடடா நாட்ல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலப்பா...புண்ணாக்கு விக்கிறவன் கக்கூஸ் கழுவரவன் எல்லாம் தொழில்அதிபராம்.....

தல: சார் எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க நான் ஊத்தறது அசல் PHENOYILnu நீங்க சொல்விங்க.

கடைசியில் வில்லனுடன் மோதி ,தல அவர்கள் தான் உபயோகிப்பது அசல் phenyoil என்று நிருபித்து, தன் contract திரும்ப பெறுகிறார்.AMSTERDAM மக்கள் மூக்கை பிடிக்காமல்
இருப்பதற்கு உதவியாக இருக்கிறார்.

தல விசிறிகள் கோக்சிக்கபடாது, சும்மா உல்லுலாயிக்கு தான்.




நயன் தாரா பிரபு தேவா கள்ள காதல் !

Labels:

சில நாட்களாக நயன் தாரா பிரபு தேவா கள்ள காதல் பற்றி ஒரே பரபரப்பாக இருக்கிறது . கள்ளகாதல் ஒரு கட்டத்தில் முற்றி பிரபு தேவாவின் மனைவிக்கும் நயன் தாராவுக்கும் குழாயடி சண்டை போல் நடந்து வருகிறது .

பிரபு தேவாவுக்கும் நயன் தாராவுக்கும் ஏற்பட்டுள்ள கள்ள உறவை சில பத்திரிகைகள் சொல்வது போல் காதல் என்று சொல்லி விட முடியாது . புனிதமான காதல் வார்த்தைகளை இந்த நாய் காதலுக்கெல்லாம் சொல்ல முடியாது . இது ஒரு கள்ள காதல் ஏற்கனவே பிரபு தேவா திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டது . எனக்கு தெரிந்து பிரபு தேவாவுக்கு குறைந்தது நாற்பது வயது ஆகியிருக்க வேண்டும் .

பிரபு தேவாவை பொறுத்த வரையில் ஒரு இளங்கன்று கிடைத்தது என்று தான் இருக்கும் ஆனால் நயனுக்கு ? நல்ல ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்த நயன் தார இந்த செயல்களால் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது என்றே சொல்லலாம் . ஏற்கனவே சிம்புவுக்கும் நயனுக்கும் காதல் என்று பின்னர் மோதலாகி முடிவுக்கு வந்தது நினைவிருக்கலாம் .


சினிமா நடிகை என்றால் கிசு கிசுக்கள் ஏற்படுவது சகஜம் தான் . ஆனால் நயன் தாராவுக்கு ஏற்பட்டுள்ள கிசு கிசுக்கள் சகிக்க முடியாததாக இருக்கலாம் . சிம்புவுடன் கிசு கிசு ஏற்பட்ட போது இதெல்லாம் சகஜம் என இருக்கலாம் சிம்பு அதுக்குள்ளே வயசு அதுக்குள்ளே பையன் தானே . ஆனால் போயும் போய் பிரபு தேவா கூடவா ? கேட்கவே முடியலப்பா ?

சரி அப்படியே இருந்தா கூட ரகசியமா இருந்து விட்டு பசிக்கு சாப்பிட்டோம்னு நினைத்து ஒதுங்கி விட வேண்டியது தானே எதுக்கு இவ்வளவு சலசலப்பு . ஏற்கனவே கள்ள காதல் மட்டேருல நம்ம நாடு ரெம்ப கேட்டு போய் கிடக்குது . கள்ள காதல் என்பதால கட்டின கணவனை கொலை செய்வது , மனைவியை கொலை செய்வது , பிள்ளைகளை கொலை செய்வது இப்படி நாடே கேட்டு கிடக்கிற நேரத்தில் ரம்லாத் ( பிரபு தேவா மனைவி ) நயன் தாரா சண்டை வேற . எங்க போய் முடிய போகுதோ ?



விஜய் கேட்டார் அஜித் கொடுத்தார்

Labels:



உரிமைக்குரல், மீனவ நண்பன் என பல பெயர்கள் பரிசீலனையில் இருந்து ஒருவாறு சுறா என விஜயின் ஐம்பதாவது படத்துக்கு பெயர் சூட்டிவிட்டார்கள். இதென்னடா பெயர் என நாமே கொஞ்சம் யோசிக்கின்றோம். ஆனால் இந்த பெயருக்கு பின்னால் ஒரு கறுப்பு சரித்திரமே இருக்கின்றது.


எதிர் எதிர் துருவங்களாக இருந்து விஜயும் அஜித்தும் மோதியது ஒருகாலம் இப்போது ஒரே தட்டில் உணவருந்தும் அளவிற்கு இந்த மானுக்கும் புலிக்கும் இடையில் நட்பு. ஒருவர் மேல் ஒருவர் என்ன அக்கறை. இப்படி இருக்கையில் விஜய் கேட்கும்போது மறுப்பாரா என்ன அஜித். ஆனால் விஜய் கேட்டதோ படப்பெயரை, அதுவும் அஜித் தன் படத்துக்கு சூட்டி மகிழ இருந்த பெயரை.

வெளி உலகிற்கு தான் இவர்கள் நட்பு உள்ளுக்குள்ளே இன்னும் அதே புகைச்சல் எரிவு என கூறி இரண்டுபேரின் ரசிகர்களின் மனதிலும் கர்ப்பூரத்தை ஏற்றிவைத்தவர்களுக்கு இப்போது அவர்கள் வயிற்றில் கர்ப்பூரம் எரியும் நிலை. காரணம் சுறா என்னும் தலைப்பு சிவாஜி புரடக்சன் சார்பில் அஜித் நடிக்க இருந்த திரைப்படத்துக்கு சூட்டிய பெயர். அதன் பின் ஒரு சில காரணங்களால் சுறா அசலாகிப்போனது.



இந்த நிலையில் சிவாஜி புரடக்சனிடம் வேறொரு சந்தர்ப்பத்தில் இதே பெயரில் இன்னொரு படம் செய்யலாம் என சொல்லி வைத்திருந்த அஜித்துக்கு சுறா மீது அளவில்லா காதலாம். இப்படி இருக்கையில் தான் சிவாஜி புரடக்சனிடம் சுறா என்னும் பெயரை விஜய் கேட்டிருக்கின்றார். விஜய் கேட்பதை மறுக்க முடியாத அதேநேரம் அஜித்தின் பேச்சையும் தட்டமுடியாமல் இருதலை கொள்ளி எறும்பாக தவித்த ராம்குமார். இந்த பெயரை தெரிவுசெய்த அஜித்திடமே நீங்கள் கேளுங்கள் என சொல்லிவிட்டார். அதன் பிறகுதான் கிளைமாக்ஸ்.

நட்பு ரீதியில் அஜித்திடம் பேசிய விஜய் பெயரை வாங்கிவிட்டார். மனமுவந்து பெயரைக் கொடுத்தாலும் அஜித்துக்கு உள்ளுக்குள் ஒரு கவலையாம். வேறொன்றுமில்லை தன் நண்பன் விஜயின் படங்களுக்கு சுறா என்னும் பெயர் பொருந்தாதே என்பதுதானாம். இதுதானே உண்மையான நண்பர்களுக்குள் இருக்கவேண்டியது.


அஜித்தின்
மனம் யாருக்கு வரும். விஜய்-அஜித் என சண்டை இடும் ரசிகர்களுக்கு இது ஒரு
நல்ல பாடம். இந்த நட்பு காலம் பூர நிலைக்கவேண்டும். அதே நேரம் விஜயும்
அரசியலை தவிர்த்து விட்டு சினிமாவில் கவனம் செலுத்தினால் ரஜினி- கமல்
இணைக்கு அடுத்து அசைக்கமுடியாத இனியாக விஜய்-அஜித் இணை வேரூன்றி நிற்கும்.