(கள்ள)காதல் கொடுத்த பரிசு!
Posted by
bayo
Labels:
cinema
ஏதோ நாலு பேரு ஒண்ணா சேர்ந்து கத்துறாங்க. நம்மை என்ன செய்ய முடியும்? என்று அலட்சியமாக போய்விட முடியாது நயன்தாரா. ஏனென்றால் மாதர் சங்கங்களின் மகிமை என்ன என்பதை கடந்த காலங்களில் உணர்த்தியிருக்கிறார்கள் பல விஷயங்களில். எனவே நயன்தாரா பிரபுதேவா விவகாரத்தில் அது சீரியஸ் ஆகாமல் பார்த்துக் கொள்வது இரு தரப்புக்குமே நல்லது.
இதற்கிடையில் பெங்களூர் மற்றும், மும்பையிலேயே தங்கியிருக்கும் பிரபுதேவா, சென்னைக்கு வருவதையே தவிர்த்து வருகிறாராம். வந்தால் மனைவிக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற அச்சம்தான் காரணம். ஆனால் போனிலேயே தனது அதிருப்தியை வெளியிட்டதோடு இப்படி மீடியாவிடம் பேசி மானத்தை வாங்குறியே என்றும் கடிந்து கொண்டாராம்.
தலைக்கு மேலே போய்விட்டது. இனிமேலும் அமைதியாக இருந்தால் குல்லாதான் மிஞ்சும். எனவே போராட்டத்தை வலுவாக்குவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் ரமலத். இதற்கிடையில் சென்னையில் 28 ந் தேதி நடைபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவெடுத்திருந்த கள்ளக்காதல் தம்பதி அந்த திட்டத்தையே கைவிட்டு விட்டார்களாம்.
கமல்ஹாசனுக்கு எடுக்கப்படும் இந்த விழாவில் இந்த தம்பதிகள் கலந்து கொண்டால் நிகழ்ச்சியின் நோக்கம் திசை மாறக் கூடும். அது கமலுக்கு பெருமை சேர்ப்பதாக அமையாது என்பது தொலைக்காட்சி நிர்வாகத்தின் கணிப்பு. எனவே அவர்கள் தரப்பிலிருந்தே இந்த கள்ளக்காதல் தம்பதிகளுக்கு "வராதீர்கள்" என்று செய்தி போயிருக்கிறதாம்.
(கள்ள)காதல் கொடுத்த பரிசை பார்த்தீங்களா?
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment