feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count
Showing posts with label ந.ந. Show all posts
Showing posts with label ந.ந. Show all posts

நடந்தவை நடப்பவை-12

Labels:

மீண்டும் ஒரு பனிக்கால துவக்கம். சென்ற பனிக்காலத்தை விட இந்த வருடம் மழை கம்மி என மதிய உணவு, இல்லை டீ குடிக்கும் இடைவேளையில் ஒரு பேச்சு துவக்கியாக பருவகாலத்தை பற்றி அங்கலாய்க்கிறார்கள்.

`அப்பா எங்களுக்கே எப்படா வெய்யில் அடிக்கும்னு ஆகிப்போச்சு`

நேற்றிலிருந்த் பரபரப்பாக பேசப்படும் இன்னொரு விஷயம் தியரி ஹென்றியின் கையால் போடப்பட்ட கோல். மரடோனாவுக்கு பின் மறுபடியும் நிகழ்வதால் இதை Hand of God part 2 என்கிறார்கள். இதனால் அயர்லாந்தை தோற்கடித்து ப்ரான்ஸ் 2010 உலக கோப்பை போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளது. அயர்லாந்து FIFAவிடம் மறுபடி விளையாட வைத்த கோரிக்கையை, நடுவரின் முடிவு இறுதியானது என நிராகரித்து விட்டது.

இதனால் கிரிக்கெட் டென்னிஸ் போல கால்பந்தாட்டத்திலும் மூன்றாம் விடியோ நடுவர் கொண்டுவரலாமா கூடாதா என விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் விளையாட்டை நிறுத்தி, நிதானமாக பெரிய திரையை பார்த்துகொண்டு கோலா இல்லியா, கையால போட்டானா என்றா பார்த்துகொண்டிருக்க முடியும் என என்று இங்கிருக்கும் பரம கால்பந்தாட்ட ரசிகர்கள் அபிப்ராய படுகிறார்கள். கிரிக்கெட் மாதிரி விளையாட்டுக்கு வேண்டுமானால் அது சரிப்பட்டு வரும். அவுட்டா இல்லியா என்று முடிவு தெரிவதற்கு முன், ட்ரின்க்ஸ் குடித்து, நகர்ந்துபோய் தொந்திரவு மண்ணும் கவட்டைகார்டை சரி செய்து கொண்டு, அவிழ்ந்த் போன ஷூ லேசை கட்டிக்கொண்டு என சாகவாசமாக விளையாட்டை தொடர முடியும்.

மனித திறனின் வரையரைக்கு உட்ட பட்டே இந்த மாதிரி விளையாட்டுக்கள் இருக்க வேண்டும். என்னதான் தொழில்நுட்பங்கள் வந்தாலும், இப்ப இந்த ஹென்றி மாதிரி கையால கோல் போடுற மாதிரி நிலை வரும் போது, அந்த தனி நபரின் நேர்மை இனி சந்தேகிக்கப்படும்.

1956-வரை ஓடிக்கொண்டிருந்த ட்ராம்களை அப்போது வந்த டீசல் பேருந்து கவர்ச்சியாக இருந்ததால் பிடிங்கி வைத்துவிட்டார்கள். இப்போது மறுபடி சின்னக்குழந்தை மாதிரி அடம் பிடித்து மற்ற ஐரோப்பிய நகரங்களில் இருப்பது போல் எனக்கும் ட்ராம் வேணும் என எடின்பரோவின் ராசகுமார தெருவை ட்ராம் வண்டிக்காக தோண்டி, இப்படி இருந்ததை


இப்படி ஆக்கிவிட்டார்கள்.


வாரா வாரம் இந்த ராசகுமார வீதிக்கு போகும் சாலைகளில் போக்குவரத்தை வெவ்வேறு திக்கில் திருப்பி விட்டுவிடுவார்கள். கிட்டதட்ட வானிலை அறிக்கை மாதிரி எப்படி திருப்பி விடுவார்களோ என்ற குழப்ப நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. உள்ளூர் மக்கள் பாடு பரவாயில்லை சுற்றுலா வரும் மக்கள் நிலைதான் பரிதாபம். GPS, மற்றும் வரைபடத்தை வைத்துக்கொண்டு ஆங்காங்கே முழித்துக்கொண்டு நிற்கும் பல பிரயாணிகள் இப்போது சகஜம். இதனால் இந்த தெருவிலிருக்கும் அநேக கடைகளில் வியாபாரம் மந்தமாகிவிட்டது என பெருமூச்சு விடுகிறார்கள்.

2011 முடித்து விடுவோம்னு சொல்லி இப்ப இந்த ட்ராமுக்கான் இருப்பு பாதையை அமைக்கும் நிறுவனம் செலவு அதிகரிக்க கூடும் அப்படீன்னு இதுக்காக எடின்பரோ நகர மன்றத்திடம் மேலும் நிதி கேட்க, அதை மன்றம் ஏற்க மறுத்து இழுபறி நிலையாகி இதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என உணர்ந்து எப்படியோ சமரசம் செய்து 2012ல் முடிச்சுடுவோம்னு சொல்லியிருக்கிறார்கள்.

இந்த பதிவை முடிப்பதற்கு முன் சமீபத்தில் நான் பார்த்த ஸ்காட்லாந் பற்றிய விடியோ, பேக்பைப்பர் இசையுடன் மிக அறுமையாக பதிவு செய்ய பட்டுள்ளது.





நடந்தவை நடப்பவை-11

Labels:

இந்த மாத துவக்கத்தில் சத்தம் போடாம ஸ்காட்லாண்டின் மேற்கு பக்கம் ஃபிர்த் ஆஃப் க்லைட்-ல் லிட்டில் கம்ப்ரே (Little Cumbrae) என்கிற தீவ சுமார் இருபது லட்சம் பவுண்டுகளுக்கு (£2m), பதஞ்சலி யோக பீடம் என்னும் அறக்கட்டளை நடத்தும் சாம் போத்தார்-சுனிதா போத்தார் தம்பதியினர் வாங்கியுள்ளனர். இந்த தீவை அமைதி (இல்லை சமாதான??) தீவு (Peace Island) என நாமகரணம் செய்து இங்கு யோக குரு ராம் தேவ் அவர்களின் யோகா மையம் செயல் படும் என அறிவித்திருக்கிறார்கள்.

பத்திரிக்கைகளில் பலவாரான செய்திகள் இதை பற்றி. யோகி ராம் தேவ் புற்று நோய் மற்றும் எய்ட்ஸ்க்கான மருந்து விற்பது ஒத்துக்கொள்ள முடியாது, இது ஏமாற்று வேலை என்றெல்லாம் சின்னதாக சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிக்கை செய்திக்கான பின்னூட்டத்தில் ஒரு மண்ணின் மைந்தர் ரொம்ப ஃபீலிங் ஆகி

"I once contemplated buying a small property in India - I was told that as a foreigner I couldn't own anywhere in India. It is sure a sorry day for Bonnie Scotland when one of its islands is allowed to become a spiritual curry restaurant. It would be interesting to see what would happen if the Scottish proposed building anything similar in Rishikesh."

அண்ணா, நீங்க நேரடியா வாங்க முடியாட்டியும் பினாமி பேர்ல வாங்கி உங்க இஷ்டம் போல செய்யலாண்ணா. அது கூட வேண்டாம், நாங்களே ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு இந்தியால இன்னும் மிச்சமிருக்கும் வனப்பிரதேசங்களையும் எதாவது ஒரு யோகா இல்லை ஆன்மீக மையத்துக்காக ஒரு வழி பண்ணீட்டுதான் இருக்கோம்.


வாழ்நாள் சாதனை பட்டம் வாங்க போனவர சோதனையா கைது பண்ணினா எப்படி இருக்கும்??

தெய்வம் நின்று கொல்லும் என்பது போல 31 வருஷம் முன்னாடி 13 வயது சிறுமியுடன் உறவு வெச்சுகிட்ட தப்புக்காக அமெரிக்க போலீஸ் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனரான ரோமன் போலன்ஸ்கியை ஸ்விஸ்ல் வைத்து கைது செய்ததுள்ளது. போலன்ஸ்கியின் சைனா டவுன் படத்தின் இறுதியில் ஒரு புகழ் பெற்ற வசனம் வரும் " Forget it, Jake, Its Chinatown" என்று, இப்படி அமெரிக்க போலிசும், "Foget it, Polanski, it is Swiss" போனா போகுதுன்னு விட்டுருவாங்கன்னு நினச்சுட்டாரு போலருக்கு.



நடந்தவை நடப்பவை-10

Labels:

சென்ற வாரம் ஒரு இந்திய நண்பரை சந்தித்தேன். அவர் எடின்பரோ வந்து ஆறு மாதஙகளுக்கு மேல் ஆகிறதாகவும், மனைவிக்கு பர்மிங்ஹாமில் வேலை கிடைத்திருப்பதால் அங்கு அவர்களுக்கு தனியாக வீடு பார்த்து குடி வைக்க வேண்டும் என்று அங்கு சென்று பார்த்து வந்ததாக கூறினார். அவர் மேலும் சொன்னது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பர்மிங்ஹாமின் சில புறநகர் பகுதிகளில் வீடு பார்த்ததாகவும் அதில் இந்தியர்கள் வாழும் சில தெருக்கள் மிகவும் குப்பை கூளமாகவும் மற்ற இடங்கள் போல, அதாவது ஐரோப்பியர்கள் வாழும் இடங்களைப் போல ஓரளவாவது சுத்தமாக இல்லை என கூறினார். இந்த மாதிரி இந்தியர்கள் அதிகமாக இருக்கிற இடங்களில் வசிக்க தனக்கு விருப்பமில்லை என்றார். அட மக்கா நம்ம பய புள்ளக இப்படி மாறிப் போய்ட்டாய்ங்களேன்னு வருத்த படரதா இல்ல பெரும படரதா?

கூகுள் அஞ்சல் வேல செய்யலேன்னா என்ன ஆகும்?

அப்படி ஒரு முப்பது நிமிஷத்துக்கு கூகுள் வல்லுனர்கள் வழக்கமான கூகுள் செர்வர் (வழங்கி??) மேம்பாட்டுக்காக நிறுத்தியபோது மில்லியன் மக்களின் தங்கல் கூகுள் அஞ்சலை பார்க்க முடியாமல் போக உடனே இப்படி டிவிட்டர் மற்றும் இன்ன பிற வற்றில் எழுதியது இப்படி :


'Omg thank God I was at work!!! I wouldve gone mad,'

'Minute 30 of Gmail outage. The cities are in flames and people eating pets to survive,

கூகுள் பிறகு இதற்கு மன்னிப்பு கேட்டாலும் எனக்கென்னவோ இவிங்க வேணும்னே செர்வர அணைச்சிட்டு என்ன ஆகுது நம்ம அஞ்சல எவ்வளவு பேர் உபயோகப்படுத்துறாங்க, எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்துன்னு ஒரு நோட்டம் விட்டுருப்பாங்கன்னே தோணுது.

கேட்டதை தேடிக்கொடுக்கும் கூகுள் ஆண்டவர் (மறுபடி கூகுளா??) காப்பத்தட்டும்.


மற்றொரு செய்தி, சென்ற வருடம் நான் சென்று வந்த Isle of Skyeல் கடந்த 49 நாட்க்களாக விடாமல் மழை பெய்து வருவதாகிறது. கோளவெப்ப உயர்வால் இப்படி ஆங்காங்கே பருவநிலை பாதிக்கப்பட்டு வருகிறது. உடனடியா நடவடிக்க எடுக்கலேன்னா 2100ல் ஒரு மீட்டர் அளவு கடல் மட்டம் உயர்ந்து விடும் அபாயமிருக்கிறது. இதனால் கடலோரமுள்ள மும்பாய், நியுயார்க், லண்டன், சாங்காய் போன்ற பல நகரங்கள் பாதிக்கப்படும்.

யுக்கேயில் இதற்காக 2010த்துக்குள் 10% கார்பன் வெளியீட்டளவை (emission) குறைப்பதற்காக 10:10 என்ற ஒரு திட்ட-இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.

இந்தியா மற்றும் சீனாவில், நடந்து பஸ் ஏறி போனவங்க எல்லாம் இரண்டு சக்கரத்துக்கும், இரண்டு சக்கரம் வெச்சிருந்தவங்க நாலு சக்கரத்துக்கும், நாலு வெச்சிருந்தவங்க இன்னும் இரண்டு நாலு சக்கரம்னு மாறிக்கிட்டு இருக்காங்க. நாங்க இப்பதான் சும்மா ஜெட் வேகத்துல வளர்ச்சி அடைஞ்சிக்கிட்டு இருக்கோம், இப்ப வந்து ”அண்ணா கொஞ்சம் புகைய கொரச்சிக்கப்பிடாதான்னா என்னா அர்த்தம்??” ன்னு அபிப்ராயப்படறாங்க. நியாந்தானே?



நடந்தவை நடப்பவை-9

Labels:

இந்த வருடம் விம்பில்டனில் உள்ளூர் ஆண்டியை வெளியூர் ஆண்டி தோற்கடித்ததில் பிரித்தானிய மாக்களுக்கு சற்று வருத்தம். ஸ்காட்லாந்துகாரரானாலும் சரி யுகே பிராந்தியவாசி என போனால் போகட்டும் 1936ல் ஜெயித்த ஃப்ரெட் பெர்ரிக்கு பிறகு ஆண்டி மர்ரியாவது ஜெயிப்பார் என எதிரிபார்த்தார்கள். அது நடக்கவில்லை.

பல்வலி என பல் மருத்துவரிடம் போனதில் வேர்கால்வாய் பழுதுபட்டிருப்பதால் ஐந்து நாட்களுக்கு ஆமாக்ஸிலின் சாப்பிட்டுவிட்டு வா அதை சரி செய்யலாம் என கூறினார். புல்லட் மாதிரி இருக்கும் அந்த மாத்திரையை சாப்பிடும் போது என் பெரியம்மா ஞாபகம் வந்தது. தினமும் காலை ஒரு மூடி நிறைய மாத்திரைகள், ரத்த அழுத்தத்துக்கு ஒன்று, கொழுப்பை குறைக எதாவது ஒரு ஸ்டாடின், இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் இருக்க ஆஸ்பிரின், ஃபோலிக் ஆஸிடுக்கு ஒன்று, மேலும் இதனுடன் ரத்த சக்கரை அளவை கட்டுப்படுத்த ஒன்று என ஒன்றன் பின் ஒன்றாக காலை ப்ரேக் ஃபாஸ்ட் போல சாப்பிடுவார். இது சிலருக்கு அவரவர் உடல நிலை பொருத்து மூன்று வேளையும் சாப்பிடும் நிலை இருக்கலாம். என்ன கொடும சார்? இப்படி பல மாத்திரைக்கு பதிலாக இவை எல்லாவற்றயும் கலந்து ஒரு கலவையாக செய்தால் என யோசித்து 2002ல் Polypill என ஒரு யோசனைய முன் வைத்து செய்த ஆராய்ச்சி பலன் தருவதாக இருக்கிறது.

இந்த பல்குளிகையில், ரத்த அழுத்தம், குழாய் அடைப்பு, கொழுப்பை குறைக்க, என எல்லாவற்றையும் ஒரே மாத்திரையில் கலந்து கொடுப்பதால் தனித்தனியே சாப்பிடும் தொந்திரவு இல்லை. இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான சோதனைகளை நடத்தியுள்ளார்கள். சமீத்ததில் இதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள். இந்த வகை மாத்திரகைள் இப்போது இந்தியாவில் பொதுவில் அனுமத்தித்து இருக்கிறர்ர்கள். விரைவில் உலகளவில் எல்லோருக்கும் கிடைக்கக் கூடும். ஆனால் பாவம் மிக நொந்து கொண்டே பல மாத்திரைகள் சாப்பிட்ட என் பெரியம்மா இந்த வசதியை பெற முடியாமலே போய் சேர்ந்துவிட்டார். Pollypill பல மாத்திரைகளை விழுங்கவேண்டிய துர்பாக்கிய நிலையிலிருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.


ஆண்கள் இல்லா உலகம்

மற்றுமொரு சமீபத்திய மருத்துவ கண்டுபிடிப்பு, நியுகாஸில் பலகலை கழக நயர்னியா (Nayernia) மற்றும் North East England Stem Cell Institute (Nesci)ம் இணைந்து சோதனைசாலையில் மனித விந்தணுவை தயாரித்து காட்டியுள்ளார்கள். இதனால் பல நன்மைகள் என இதனை கண்டுபிடித்தவர்கள் பட்டியலிட்டாலும், இது சரியில்லை என அதற்குள்ளாக பல எதிர்ப்புகள் குவிந்துள்ளது.

இதன் தொடர்பாக உலக அளவில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதாக ஒரு தகவல் எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. இந்த மாதிரி செயற்கையாக தயாரித்த விந்தணு மூலம் செயற்கையாக ஒரு பெண் கருத்தரிக்க இயலும். பின்பு ஆண் என்பது தேவையில்லாது போகும். இப்படியே தொடர்ந்தால், ஆண்களே இல்லத உலகமாக மாறும் வாய்பிருக்கிறது.

இந்த வியுகத்திற்கு ஆதரவாக ஆறு வருடங்களுக்கு முன்பு வந்த ப்ரெய்ன் சைக்ஸ் (Bryan Sykes) என்பவர் எழுதிய Adam's Curse என்கிற புத்தகத்தில் ஆண்கள் இல்லாத உலகம் என்கிற ஒரு கோட்பாடை முன் வைத்து எழுதியிருக்கிறார். மனித செல்லில் 23 ஜோடி க்ரோமொசோம்கள் உள்ளது. இதில் 22 ஜோடிகள ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியானவை. இந்த 23வது ஜோடியில்தான் ஆணுக்கு XY க்ரோமொசோம் பெண்ணுக்கு XX க்ரோமொசோம். இந்த Y க்ரோமொசோம் என்பதுதான் ஆணின் விந்தனு உற்பத்தி செய்யும் தன்மையை கொடுக்கிறது.

ஒவ்வொரு முறையும் செல் பிரியும் போது இந்த க்ரோமொசோமில் எதாவது கோகளாறு எற்பட்டால் சரி ஜோடி க்ரோமொசோம்களில் இந்த கோளாறு சரிசெய்ய பட்டுவிடும். ஆனால் இந்த் XY ஜோடியில் Y க்ரோமொசோமில் ஏற்படும் கோளாறுகள் சரிசெய்ய ஜோடியில்லாது போவதால் கோளாறுகள் தொடரும். ஒவ்வொரு தலைமுறை ஆண்களுக்கு இந்த Y க்ரோமொசோம் மரபணு மாறுந்தன்மையால் 10 சதவிகிதம் இனபெருக்கம் செய்ய இயலாது போகும். இப்படியே தொடர்ந்து 125000 வருடங்களுக்கு பின்பு இந்த Y க்ரோமொசோம் முற்றிலுமாக செயலிழந்து அல்லது அழிந்தே போகக கூடும் என்று கூறுகிறார். ஆனால் பெண் இனம் single sex reproduction or Asexual முறைப்படி கருத்தரிக்க இயலும். ஆக ஆண்கள் இல்லாத உலகம் இன்னும் 125000 வருடத்தில் சாத்தியமே. அந்த உலகம் எப்படி இருக்கும்? அவரவர் கற்பனைக்கு...



நடந்தவை நடப்பவை-8

Labels:

நம்ம ஊர்ல குழந்தைகள் திருமணம் (child marriage) மிக சகஜம் (இப்போது மிகக்குறைவு) ஆனாலும் அவர்கள் 13 வயதில் பிள்ள பெற்றுக்கொண்டதில்லை. ஆனால் யூக்கேயில் இந்த வாரம் மிகுந்த சர்ச்சையை கிளப்பிய விஷயம் 13 வயதில் Alfie Patten அப்பாவனது. சரி, இவனது குழந்தைக்கு தாய் யாரென்று பார்த்தால் Chantelle Steadman வயது 15!!. ஊடகங்களுக்கு கொண்டாட்டம், , புகைப்படம் , மற்றும்:

அப்பாவனது பற்றி எப்படி உணர்கிறாய்?
எப்படி வளர்க்கப்போகிறாய்?
செலவுக்கு என்ன பண்ணுவாய்? என்கிர ரீதியில் பேட்டி.

இப்போது யார் குழந்தைக்கு தந்தை என்பதில் போட்டி வந்து விட்டது. இது ஏன் என்றால் Chantelle மேலும் இரண்டு பேரோடு உறவு வைத்திருந்ததாக சொல்லுகிறார்கள். அரசியல்வாதிகள் வழக்கம் போல் சமூகம் மிகவும் கெட்டுப்போய்விட்டது இதற்கு காரணம் எதிர்கட்சியின் சில கொள்கைகளே என்கிற ரீதியில் சவுண்டு விட்டாலும், இவர்களுக்கு ஆதரவாக கத்தோலிக்க பாதிரியார் சீமஸ் ஹெஸ்டர் குரல் கொடுத்திருக்கிறார், இவர்களுக்கு வயது என்னவாக வேண்டுமானாலும்(!!) இருந்துவிட்டு போகட்டும், இந்த குழந்தையை கருச்சிதைவு செய்யாமல், மனித உயிரின் பேரில் இவர்கள் கொண்டுள்ள மரியாதை போற்றத்தக்கது, என்று.

ஆஹா வாழ்க மனித நேயம்!!



நடந்தவை நடப்பவை-7

Labels: ,

சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள் மூலம் இந்தியாவில் மனித உரிமை அல்லது தனி மனித சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதை மிக சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

ஒன்று மங்களூர் pubபில் (தமிழ்ல்??) பெண்களை அடித்து ஒட ஒட துரத்தியது. பார் என்பது ஆண்களுக்கு மட்டும் தானா என்ற கேள்வி மேலோட்டமாக இருந்தாலும் அதன் பின் உள்ள ஆணாதிக்க சமூக நிலைபாடு எல்லோருக்கும் (பெண்களுக்கும் கூட) பொதுவாகவே உள்ளது. pubபுக்கு போகும் பெண்ணை தவறான கண்ணோட்டத்துடனே பார்க்கும் மனோபாவம் மிக இயல்பான ஒன்று. கலாசாரம் மாறுவதை யாரால தடுக்க இயலும்? காலம் மாறினால் கலாச்சாரமும் மாறும். சட்டங்களும், நம்பிக்கைகளுமே கூட மாறித்தான் போகும். ஆனாலும் ராம சேனைகள் மாறுதலை தாங்க முடியாது சிறு குழந்தைகள் போல செய்யும் அடாவடிகள் (tantrums) இவர்களும் (மன) வளர்ச்சியுற்று தவிர்க்கவே முடியாத மாறுதலுக்கு உட்பட்டாலே ஒழிய இந்த மாதிரி கிளர்ச்சிகள் நடந்துகொண்டுதானிருக்கும் போலிருக்கிறது.

இப்போது வர இருக்கும் வெலண்டைன்ஸ் தினத்தையும் எதிர்த்து இந்த ராம சேனா கிளர்ச்சி செய்ய இருப்பதால் இவர்களை எதிர்த்து வலையில், facebookல் ஒரு 5000 உறுப்பினர்கள் (ஆண்கள் உட்பட) தங்களது கண்டனத்தை, இந்த ராம சேனைக்கு இளஞ்சிவப்பு உள்ளாடை அனுப்புவதன் மூலம் தெரியபடுத்தி இருக்கிறார்கள்.




இனி மற்றொன்று மும்பையில் நடந்த தீவிர வாத தாக்குதலின் போது NDTV இதனை ஒளிபரப்பிய விதத்தை விமர்சித்து தனது வலைத்தளத்தில் எழுதியதை கண்டித்து அந்த வலைப்பதிவாளருக்கு அவர் எழுதியதை நீக்குவதல்லாமல் மன்னிப்பும் கோர வேண்டும் என்றுநீதிமன்ற எச்சரிக்கை அனுப்பியது. அதன் பின் வேறு வழியின்றி அவர் அதை நீக்கி தன் வலைத்தளத்தில் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

ஆக உங்களுக்கு பேச்சுரிமை மீது நம்பிக்கையிருந்தால் NDTVயின் நடவடிக்கையை எதிர்த்து உங்கள் வலையில் ஒரு சிறு எதிர்ப்பை தெரிவிக்கவும்.

Shame on NDTV, Ms Burkha Dutt, and Mr. Prannoy Roy


பிகு:
NDTV: A very popular TV news media is funded by Gospels of Charity in Spain Supports Communism. Recently it has developed a soft corner towards Pakistan because Pakistan President has allowed only this channel to be aired in Pakistan . Indian CEO Prannoy Roy is co-brother of Prakash Karat, General Secretary of the Communist party of India . His wife and Brinda Karat are sisters.




நடந்தவை நடப்பவை-6

Labels: ,

நீச்சல் வகுப்பு இருப்பதால் சனிக்கிழமை காலை கஷ்டப்பட்டு எழுந்து ப்ரின்ஸஸ் தெருவில் பஸ் பிடிக்க செல்லும்போது விஸ்கி வாசம் காற்றில் மிதந்து வந்தது. வெள்ளி இரவு இந்த ஊர் மக்கள் ஏதோ திங்கள் கிழமை இருக்கிற எல்லா சரக்கையும் கடலில் கொட்டிவிடப்படும் என அரசாங்க ஆணை வந்தது போல் குடித்து தீர்த்து விடுவார்கள். அந்த போதையில் யாராவது பாட்டிலை ரோட்டில் கவிழ்த்து விட்டிருப்பான்(ள்) என நினைத்தால் வீட்டைவிட்டு வந்து வின்சென்ட் தெரு, ஹோவ் தெரு தாண்டி ஃப்ரெட்ரிக் தெருவந்து ப்ரின்ஸஸ் வரும் வரை எங்கும் அதே வாசம். எடின்பரோவில் வைக்கோல் சந்தை அருகே இருக்கும் காலடோனியன் வடிசாலை (distillery) ஞாபகம் வந்தது. நேத்து ராத்திரி ஊத்திக்கிட்ட சரக்கு ஞாபகமா இருக்க காலையில் காற்றில் மிதந்து வரும் விஸ்கி வாசம் இந்த ஊர் "குடி"மக்களுக்காகவே.

நீச்சல் குளம் இருக்குமிடம் தெரியாமல், ஒரு சின்ன போர்டு போட்டு இருந்தது. உள்ளே போனால் இரண்டு பாட்மிட்டன் கோர்ட் சைஸ்க்கு குளம் மிகவும் சுத்தமாக இருந்தது. போன இரண்டு வாரங்களாக வந்த ஆசான் லீவுல போனதால இந்த வாரம் மேரி என்ற புது டீச்சர். இரண்டொரு நிமிடங்களிலேயே இவர் குழந்தைகளுக்கான ஆசிரியை என தெரிந்து போனது:

நீ எங்க தங்கியிருக்கே?

எப்படி வந்தாய் பஸ்ஸுலயா? காருலயா?

இன்னிக்கி நல்ல மழ இல்லியா?


என இப்படி சம்பாஷனை போய்கொண்டிருந்தது, இறுதியில் இதெற்கெல்லாம் மகுடமாக வகுப்பு முடிய ஐந்து நிமிடம் இருந்த போது "சரி இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு உங்களுக்கு என்ன பன்ணனும்னு தோனுதோ அத பண்ணுங்க!!!" (do whatever you like) என்றாளே பார்க்கலாம். என் பையனை நீச்சல் வகுப்புக்கு அழைத்து சென்று அங்கு குழந்தைகளுக்கு வகுப்பு முடிவில் ஒரு ஐந்து நிமிடம் இப்படி சொல்லி விட்டுவிடுவார்கள் அது ஞாபகத்துக்கு வர என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

எனினும, எதையும் படிக்கனும் என வகுப்புக்கு வந்து விட்டால் வாத்தியாருக்கு நாம் எவ்வளவு வயதான போதும் குழந்தைகள் போல்தானோ என தோன்றியது.

மாலை மிக அருமையான வெய்யிலடித்ததால் வீட்டுக்கு அருகே இருக்கும் பொட்டானிக்கல் கார்டனை கண்டுபிடிக்கலாம் என நடக்க தொடங்கினேன். சில தூரம் வந்த பின் புகைபடக்கருவியை எடுத்து வந்திருக்கலாம் என்ற ஞானோதயம் கூடவே சோம்பேறித்தனமும் வந்ததால் சரி அடுத்த முறை பார்க்கலாம் என கார்டனுக்கு வந்து சேர்ந்தேன். நான் வந்த நேரம் மாலை 4.30 மணி. உள்ளே இருக்கும் கண்ணாடிவீட்டுக்கு வார இறுதி நாட்களில் மாலை 4 மணிக்கு மேல் அனுமதி இலவசம் என கேட்டுக்கு அருகே இருக்கும் போர்டு சொல்லியது. அஹா 3.50 பவுண்டு மிச்சம் என குதூகலமாக நடக்க தொடங்கினே.

உலகின் பல இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்கள், செடிகள். எல்லாவற்றுக்கும் அதன் பெயர் எந்த நாட்டை சேர்ந்தது என்ற குறிப்புகளுடன் மிக அழகாக வைத்திருக்கிறார்கள்.

காமிரா எடுத்து வரவில்லையென்றால் என்ன அதான் செல் காமிரா இருக்கிறதே என சில வற்றை க்ளிக்கினேன்.





இங்கு எடின்பரோவில் எங்கு பார்த்தாலும் பூத்திருக்கும் டஃபோடில்(daffodil), கான்சர் சொசைட்டியின் சின்னம்.



நடந்து நடந்து கண்ணாடிவீட்டுக்கு வந்தேன். ஏன் இதற்கு 3.50 பவுண்டுகள் என புரிந்தது. மிகப் பிரமாண்டம். கிட்டதட்ட நம்ம சிவாஜி "சஹானா பாடல் செட் மாதிரி". வெப்ப மண்டலம், மழைக்காடுகள், வரண்ட பகுதி, பாம் (palm) மரங்கள் என இந்த பூமி உருண்டையில் உள்ள அத்தனை சீதோஷ்ன நிலைகளையும் உள்ளடக்கிய பகுதிகள கொண்டது. கீழே உள்ள படம் மழைக்காட்டு பகுதியில் நுழைந்தபோது கண்ணாடியில் படியும் நீராவி எஃபெக்ட் மொபைலின் லென்சில் படிந்து அதனாலேயே அழகாக வந்த படம்.



வெப்ப மண்டல பகுதியில் ஒரு மூலையில் ஷோகேஸ் மாதிரி வைத்து இந்த மண்டலத்தில் விளையும் சில முக்கியமான் பொருட்களை வைத்திருந்தார்கள். வெல்லம், சோளம், கோதுமை, வாழை, மாம்பழம், எள்ளு.. என அப்படியே பார்த்தால் ஒரு அரிசி மூட்டை அதன் மேலே என்னவென்று பார்த்தால் நம்ம ஊரு MTR இன்ஸ்டன்ட் இட்லி மாவு பாக்கெட!! அட பரவாயில்லையே என் தோன்றியது.

மன்னிக்கவும் சற்று உள்ளடங்கியிருந்ததால் ஃபோகஸ் ஆகவில்லை.

எல்லாம் முடிந்து வெளியே வரும் நூழை வாயில் கேட்டுக்கு அருகே வந்த போது ஐந்தும் மூன்று வயதுமான் மகளையும் மகனையும் ப்டித்துக்கொண்டு ஒருவர் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்தார். அப்போது நான் கேட்ட சம்பாஷனை:

மகள்: "அவ்வளவுதானா டாடி?"

அப்பா: "ம் ஆச்சு. இப்போ சமத்தா இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தா காருக்கு போயி அப்புறம் வீட்டுக்கு போகலாம்."

மகள்: "ம் சரி. அந்த அணில் எவ்வளவு நல்லா இருந்தது? க்ளாஸ்ஹவுஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அம்மவோட இன்னொருதரம் வரலாமா?"

அப்பா: "ம் வரலாம். சரி இப்போ போகரதுக்கு முன்னாடி ஒரு வேல பாக்கியிருக்கு. இன்னிக்கு நம்மள ஃப்ரீயா உள்ள விட்டாங்க இல்லியா, ஆனா எவ்வளவு செலவு செஞ்சு நல்லா வெச்சிருக்காங்க அத பாராட்றா மாதிரி நீங்க இப்ப இந்த காச அங்க வெச்சிருக்கிற டொனேஷன் உண்டியல்ல போட்டுட்டு வாங்க", என கூறி இருவருக்கும் சில்லறைகளை கொடுத்து அவர்களும் போட்டு விட்ட வந்தனர்.

இன்று அனுமதி இலவசம் என்று எனக்கு பட்டது சிற்றின்பமாக தோன்றியது.

மேல் நாட்டவரிடம் குழந்தைகளை வளர்க்கும் சில நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது.