நடந்தவை நடப்பவை-9
இந்த வருடம் விம்பில்டனில் உள்ளூர் ஆண்டியை வெளியூர் ஆண்டி தோற்கடித்ததில் பிரித்தானிய மாக்களுக்கு சற்று வருத்தம். ஸ்காட்லாந்துகாரரானாலும் சரி யுகே பிராந்தியவாசி என போனால் போகட்டும் 1936ல் ஜெயித்த ஃப்ரெட் பெர்ரிக்கு பிறகு ஆண்டி மர்ரியாவது ஜெயிப்பார் என எதிரிபார்த்தார்கள். அது நடக்கவில்லை.
பல்வலி என பல் மருத்துவரிடம் போனதில் வேர்கால்வாய் பழுதுபட்டிருப்பதால் ஐந்து நாட்களுக்கு ஆமாக்ஸிலின் சாப்பிட்டுவிட்டு வா அதை சரி செய்யலாம் என கூறினார். புல்லட் மாதிரி இருக்கும் அந்த மாத்திரையை சாப்பிடும் போது என் பெரியம்மா ஞாபகம் வந்தது. தினமும் காலை ஒரு மூடி நிறைய மாத்திரைகள், ரத்த அழுத்தத்துக்கு ஒன்று, கொழுப்பை குறைக எதாவது ஒரு ஸ்டாடின், இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் இருக்க ஆஸ்பிரின், ஃபோலிக் ஆஸிடுக்கு ஒன்று, மேலும் இதனுடன் ரத்த சக்கரை அளவை கட்டுப்படுத்த ஒன்று என ஒன்றன் பின் ஒன்றாக காலை ப்ரேக் ஃபாஸ்ட் போல சாப்பிடுவார். இது சிலருக்கு அவரவர் உடல நிலை பொருத்து மூன்று வேளையும் சாப்பிடும் நிலை இருக்கலாம். என்ன கொடும சார்? இப்படி பல மாத்திரைக்கு பதிலாக இவை எல்லாவற்றயும் கலந்து ஒரு கலவையாக செய்தால் என யோசித்து 2002ல் Polypill என ஒரு யோசனைய முன் வைத்து செய்த ஆராய்ச்சி பலன் தருவதாக இருக்கிறது.
இந்த பல்குளிகையில், ரத்த அழுத்தம், குழாய் அடைப்பு, கொழுப்பை குறைக்க, என எல்லாவற்றையும் ஒரே மாத்திரையில் கலந்து கொடுப்பதால் தனித்தனியே சாப்பிடும் தொந்திரவு இல்லை. இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான சோதனைகளை நடத்தியுள்ளார்கள். சமீத்ததில் இதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள். இந்த வகை மாத்திரகைள் இப்போது இந்தியாவில் பொதுவில் அனுமத்தித்து இருக்கிறர்ர்கள். விரைவில் உலகளவில் எல்லோருக்கும் கிடைக்கக் கூடும். ஆனால் பாவம் மிக நொந்து கொண்டே பல மாத்திரைகள் சாப்பிட்ட என் பெரியம்மா இந்த வசதியை பெற முடியாமலே போய் சேர்ந்துவிட்டார். Pollypill பல மாத்திரைகளை விழுங்கவேண்டிய துர்பாக்கிய நிலையிலிருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
ஆண்கள் இல்லா உலகம்
மற்றுமொரு சமீபத்திய மருத்துவ கண்டுபிடிப்பு, நியுகாஸில் பலகலை கழக நயர்னியா (Nayernia) மற்றும் North East England Stem Cell Institute (Nesci)ம் இணைந்து சோதனைசாலையில் மனித விந்தணுவை தயாரித்து காட்டியுள்ளார்கள். இதனால் பல நன்மைகள் என இதனை கண்டுபிடித்தவர்கள் பட்டியலிட்டாலும், இது சரியில்லை என அதற்குள்ளாக பல எதிர்ப்புகள் குவிந்துள்ளது.
இதன் தொடர்பாக உலக அளவில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதாக ஒரு தகவல் எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. இந்த மாதிரி செயற்கையாக தயாரித்த விந்தணு மூலம் செயற்கையாக ஒரு பெண் கருத்தரிக்க இயலும். பின்பு ஆண் என்பது தேவையில்லாது போகும். இப்படியே தொடர்ந்தால், ஆண்களே இல்லத உலகமாக மாறும் வாய்பிருக்கிறது.
இந்த வியுகத்திற்கு ஆதரவாக ஆறு வருடங்களுக்கு முன்பு வந்த ப்ரெய்ன் சைக்ஸ் (Bryan Sykes) என்பவர் எழுதிய Adam's Curse என்கிற புத்தகத்தில் ஆண்கள் இல்லாத உலகம் என்கிற ஒரு கோட்பாடை முன் வைத்து எழுதியிருக்கிறார். மனித செல்லில் 23 ஜோடி க்ரோமொசோம்கள் உள்ளது. இதில் 22 ஜோடிகள ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியானவை. இந்த 23வது ஜோடியில்தான் ஆணுக்கு XY க்ரோமொசோம் பெண்ணுக்கு XX க்ரோமொசோம். இந்த Y க்ரோமொசோம் என்பதுதான் ஆணின் விந்தனு உற்பத்தி செய்யும் தன்மையை கொடுக்கிறது.
ஒவ்வொரு முறையும் செல் பிரியும் போது இந்த க்ரோமொசோமில் எதாவது கோகளாறு எற்பட்டால் சரி ஜோடி க்ரோமொசோம்களில் இந்த கோளாறு சரிசெய்ய பட்டுவிடும். ஆனால் இந்த் XY ஜோடியில் Y க்ரோமொசோமில் ஏற்படும் கோளாறுகள் சரிசெய்ய ஜோடியில்லாது போவதால் கோளாறுகள் தொடரும். ஒவ்வொரு தலைமுறை ஆண்களுக்கு இந்த Y க்ரோமொசோம் மரபணு மாறுந்தன்மையால் 10 சதவிகிதம் இனபெருக்கம் செய்ய இயலாது போகும். இப்படியே தொடர்ந்து 125000 வருடங்களுக்கு பின்பு இந்த Y க்ரோமொசோம் முற்றிலுமாக செயலிழந்து அல்லது அழிந்தே போகக கூடும் என்று கூறுகிறார். ஆனால் பெண் இனம் single sex reproduction or Asexual முறைப்படி கருத்தரிக்க இயலும். ஆக ஆண்கள் இல்லாத உலகம் இன்னும் 125000 வருடத்தில் சாத்தியமே. அந்த உலகம் எப்படி இருக்கும்? அவரவர் கற்பனைக்கு...
Wednesday, July 08, 2009 | 0 Comments
எங்கிருந்தோ ஒரு மழை வந்தது
இடியோசை கேட்கிலயோ?
மழையில் நடப்பது என்பது எனக்கு பிடித்தமான ஒன்று. சமீபத்தில் இடியோசையுடன் கூடி மழை சென்றவாரம். எடின்பரோவில் அவ்வளவாக மின்னலோ இடியுடன் கூடிய மழையோ கிடையாது. பலருக்கு மின்னலை பார்க்கவே முடியவில்லையே என்ற வருத்தமும் கூட. வழக்கத்தைவிட இந்த வருட வசந்த காலத்தில் (மார்ச்-மே) மழை கம்மி. பனிக்காலம் முடிந்தவுடன் இங்குள்ள செர்ரி ப்ளாசம் (Cherry Blossom) மரங்கள் இலையே இல்லாமல் பூத்து தள்ளிவிடும் பார்க்கவே மிக ரம்மியமாக இருக்கும். செர்ரி பழத்துக்கும் இந்த செர்ரி ப்ளாசம் மரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது வேறு வகை மரம் இது வேறு.
பல்கலைகழகத்துக்கு நடந்து செல்லும் வழியெங்கும் இந்த மரங்கள், வித விதமான வர்ணங்களில்..


நடந்துகொண்டே செல் காமிராவில் பிடித்ததால் அவ்வளவு சிறப்பாக வரவில்லை ஆயினும் அந்த அழகு காட்சியில் புரிபடும் என்று நினைக்கிறேன். வழக்கமாக பெஃபரவரி இறுதியில் பூத்துவிடும் இந்த மரங்கள் மார்ச் இறுதி தொடங்கி ஏப்ரலில்தான் பூக்கத் தொடங்கின. இப்படி பூக்கும் மரங்கள் கடந்து போன பனிக்காலம் எப்படி இருந்தது என்பதையோ அல்லது வர இருக்கும் கோடை எப்படி இருக்கக்கூடும் என்பதையோ எடுத்து கூறுவது போல் இருக்கிறது. அதனால்தான் இங்குள்ள மக்கள், இப்படி நடந்தால் அந்த வருடம் கோடை மிகவும் நன்றாக இருக்கும் என்ற ஒரு பழைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது மிகச் சரி என்பது போல கோலாகலமாக மழையே இல்லாத வெய்யிலோ வெய்யில் காயும் கோடை தொடங்கியுள்ளது.
நியுசியிலும் பனிக்காலம் முடிந்த பின் வச்ந்த காலத்தில் பூக்கும் பொஹுட்டுக்காவா மரங்களும் பார்க்க அழகாக இருக்கும்.
2007ல் நம்ம ஊருக்கு(தில்லி தொடங்கி, மதுரை வரை) போனபோது மரங்கள் இல்லாத பட்டினம் எங்கும், மக்கள், கட்டிடங்கள், கட்டிடங்கள், பின்பு மரங்களே இல்லாத வெளிகள். முன்பெல்லாம் நம்ம ஊரிலும் பூ பூக்கும் மரங்கள் இருந்தது. உதாரணத்துக்கு Flame or Fire of the forest என்று சொல்லப்படும் சிகப்பு வர்ணத்தில் பூக்கும் மரங்கள் இந்த செர்ரி மற்றும் பொஹுட்டுக்கு இணையான அழகு உண்டு.7% GDPயை நோக்கிய அசுர வளர்ச்சியில் இந்த மரங்கள் எல்லாம் காணமலே போய்விட்டன.
Wednesday, June 17, 2009 | 0 Comments