விஜய்யின் பேவரிட் ஹீரோயின் அடம்.
-மேட்டுப் பாளையத்தில் பெரியார் திகவினர் மேற்கொண்ட கறுப்புக் கொடி போராட்டத்தைப் பார்த்து மிரண்டுபோன அசின் சொன்னது இது.
ஹீரோயினாச்சே… அதிலும் விஜய்யின் பேவரிட் ஹீரோயின் சொன்ன பிறகு அப்பீலேது?
அடுத்த நாளே பாலக்காடு பறந்தது காவலன் படக்குழு, ஹீரோ விஜய்யுடன்.
மேட்டுப் பாளையத்தில் எடுக்க வேண்டிய பல காட்சிகளை ஒத்தப்பாலம் மற்றும் பாலக்காடு பகுதியிலேயே வைத்து எடுத்துக் கொண்டார்களாம். மூன்று தினங்கள் நடந்த இந்தப் படப்பிடிப்பில் வடிவேலுவும் பங்கேற்றார். “இப்போதான் எனிக்கு ரிலீஃப்” என்று அசின் கூற, “அதெப்படி… ரிலீசாகணுமில்ல. அதையும் பாலக்காட்டிலேயே வச்சிக்கிற முடியுமா… போத்தா!” என்று நக்கலடித்தாராம் வடிவேலு.
Saturday, October 09, 2010 | 0 Comments
சிம்புவுடன் நான்.
வானம் படத்தில் சிம்புவுடன் சேர்ந்து இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிப்பதற்கு அர்த்தம், என் மார்க்கெட் சரிந்து விட்டது என்பதல்ல… இந்தி மாதிரி தமிழிலும் பல ஹீரோக்கள் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் லட்சியமும், தயாரிப்பாளர்களுக்கு லாபமும் ஆகும்.
இதை நான் ஆரம்பம் தொட்டே உணர்ந்திருப்பதால்தான் பாய்ஸ், 4 ஸ்டூடண்ட்ஸ், பட்டியல், வெயில் எனு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும், கதைகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன்.
சமீபமாக வித்தியாசமான கதை அம்சங்கள் கொண்ட படங்கள் வெளிவருகின்றன. பெரிய நடிகர்கள், அறிமுக நாயகர்கள் யார் நடித்தாலும் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்கள் ஜெயித்து வருகின்றன. அதன் அடிப்படையிலேயே சற்று இடைவெளிக்குப் பின் மீண்டும் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்க துணிந்துள்ளேன்…!
- சிம்பு படத்தில் 2வது ஹீரோவாக நடிப்பதற்கு விளக்கவுரை, பொழிப்புரை எல்லாம் கொடுத்திருப்பவர் வேறு யாருமல்ல… சாட்சாத் காதல் நாயகர் பரத்தான்!
மார்க்கெட் டல் ஆனால் எல்லோரும் சொல்லும் சொல்தான்! வரேவா!!
Saturday, October 09, 2010 | 0 Comments
நயனிடமிருந்து விலகிச் செல்லப் போகிறாராம் அஜீத்.
ஐயா படத்திலிருந்து நயனின் கால்ஷீட் மேனேஜராக இருந்தவர் இந்த அஜீத். நயன் பிரபுதேவா திருமண அறிவிப்பால் அப்செட் ஆகியிருந்த இவர் இப்போது தீர்மானமாக ஒரு முடிவெடுத்துவிட்டார்.
ஆகவே அஜீத்தை வைத்துக்கொள்ள (கால்ஷீட் மேனேஜராக மட்டும்), ஆசைப்படும் நடிகைகள் முயற்சித்துப் பார்க்கலாம்.
Saturday, October 09, 2010 | 0 Comments
எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம்
சினிமா நகைச்சுவை நடிகரும், அதிமுகவில்கொள்கை பரப்பு செயலாளருமான எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் காலமானார். திருவாரூர் அருகே உள்ள இடும்பாவனத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மன்னார்குடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தார்.
அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
69 வயதாகும் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் 1986ம் ஆண்டு பாலைவன ரோஜாக்கள் படத்தில் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.
இவர் பாட்டி சொல்லைத் தட்டாதே, மாப்பிள்ளை, உழைப்பாளி, ஆத்தா உன் கோவிலிலே, சின்னப்பதாஸ், காக்கை சிறகினிலே, கதாநாயகன், நாடோடி பாட்டுக்காரன், தங்கைக்கோர் கீதம், வண்டிச்சோலை சின்னராசு, தங்கமான புருஷன், உனக்காக எல்லாம் உனக்காக, உயிருள்ளவரை உஷா, காதல் ரோஜாவே, ஒன்ஸ்மோர், புதிய மன்னர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
Saturday, October 09, 2010 | 0 Comments