feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

காலடேனியன் காட்டின் கோலங்கள்

Labels: , , ,

இங்க பக்கத்துல போட்டிருக்கிற கோலத்த பாருங்க..
அட கோலம் என்றால் தமிழ்ல இன்னொரு அர்த்தம் பன்றிங்கோ.


உதாரணத்துக்கு இந்த புராண பாடல்களில் பார்க்கலாம்.




ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவர்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்நிற்னான் வேழம் முதலே எனஅழைப்ப
என்என்றான் எங்கட் கிறை. (--- நளவெண்பா)

கோலமெனு மோருருவு கொண்டுபில மேகி
ஞாலமெவ ணுற்றதென நாடியது தன்னை
வாலிய வெயிற்றினிடை வல்லைகொடு மீண்டு
மூலமென வேநிறுவி மொய்ம்பினொடு போனான் (-19--கந்தபுராணம்)
பன்றிக் காய்ச்சலால் உலகமே அரண்டு போய் பன்றியை கண்டாலே தெறிச்சு ஒடும் அளவுக்கு இந்த (அப்)பிராணி மேல பழி வந்து விட்டது. விமான நிலையத்துல முழு-உடல் வெப்பமாணிகளை வைத்து பிராயனிகளை சோதனை செய்யும் அளவுக்கு பீதி பரவியது. இந்த வெப்பமாணிகளை கடந்து போகும் பிரயாணிகளின் உடல் வெப்பத்தை திரையில் பார்த்தபின் அவர்களை அனுமதிக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் சென்னை சென்று வந்த நண்பர் சொன்னது என்ன வென்றால், சில அதிகாரிகள் மானிடரை சிறிதுகூட பார்க்காமலேயே பிரயாணிகளை கடந்து செல்ல அனுமதித்து இருக்கிறார்கள். அந்த அதிகாரிகள் எந்த அளவுக்கும் சலித்து/நொந்து போயிருக்க வேண்டும்?

ஆனால் இந்த அப்பிராணியின் மூதாதயைரான காட்டு பன்றி (wild boar) இருக்க வேண்டிய இடமான காட்டில் இல்லாமல் போனதால காடே காணாமல் போய் விடக்கூடும் அபாயம் இருப்பதாக Trees for life அறக்கட்டளை மக்கள் அபிப்ராயப்படுகிறார்கள். இதற்காக இந்த வாரம் பல காட்டு பன்றிகளை சுதந்திரமாக இந்த காலடேனியக் காட்டில் விட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 13ம் நூற்றாண்டு வாக்கில் இந்த பக்கத்து, ஆங்கிலோ-சாக்ஸன், வைக்கிங் மற்றும் இன்ன பிர குறு, மற்றும் மாமன்னர்களும், ராசாக்களும் பொழுது போகாமல் வேட்டையாடி கிட்டத்தட்ட இந்த வகை பன்றிளை அழித்தே விட்டார்கள்.

இந்த வகை பன்றிகள் மூக்கால் நிலைத்தை கிளறி அதனடியிலிருக்கும் ஒருவகை Rizhomeகிழங்குளை (??) உண்ணும். இந்த வகை செடிகள் fern என்னும் மரங்களை வளரவிடாமல் செய்யும். இந்த பன்றிகள் இதை உண்பதால் இந்த வகை செடிகள் மிகவும் கட்டுப்படுத்தப் பட்டு fern மரங்களும் அதயொட்டிய மற்ற வகை தாவரங்களும் இயற்கையில் எப்படி வளருமோ அவ்வாறே வளர்வதை பரிசோதித்து நிரூபித்திருக்கிறார்கள். ஆக எல்லா ஜீவ ராசிகளுக்கும் பங்கு இருப்பதை மீண்டும் இந்த பன்றியின் முலம் இயற்கை எடுத்து சொல்லியிருக்கிறது. வீரப்பன் போன்று காட்டில் விடப்பட்ட இந்த பன்றிகளை யாராவது வேடையாடி ஏப்பம விட்டுவிடாமல் இருக்க இந்த பன்றிகளின் மீது ட்ரான்ஸ்மீட்டர் பொருத்தியிருக்கிறார்கள்.

ஆக திருமால் வராகமாக தோண்டியெடுத்து பூமிய காப்பாத்துனாருன்னு சொன்னது இதத்தானோ?? பெரியாரிஸ்டுகளால் ஒத்துக்கொள்ள முடியாது.



நடந்தவை நடப்பவை-12

Labels:

மீண்டும் ஒரு பனிக்கால துவக்கம். சென்ற பனிக்காலத்தை விட இந்த வருடம் மழை கம்மி என மதிய உணவு, இல்லை டீ குடிக்கும் இடைவேளையில் ஒரு பேச்சு துவக்கியாக பருவகாலத்தை பற்றி அங்கலாய்க்கிறார்கள்.

`அப்பா எங்களுக்கே எப்படா வெய்யில் அடிக்கும்னு ஆகிப்போச்சு`

நேற்றிலிருந்த் பரபரப்பாக பேசப்படும் இன்னொரு விஷயம் தியரி ஹென்றியின் கையால் போடப்பட்ட கோல். மரடோனாவுக்கு பின் மறுபடியும் நிகழ்வதால் இதை Hand of God part 2 என்கிறார்கள். இதனால் அயர்லாந்தை தோற்கடித்து ப்ரான்ஸ் 2010 உலக கோப்பை போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளது. அயர்லாந்து FIFAவிடம் மறுபடி விளையாட வைத்த கோரிக்கையை, நடுவரின் முடிவு இறுதியானது என நிராகரித்து விட்டது.

இதனால் கிரிக்கெட் டென்னிஸ் போல கால்பந்தாட்டத்திலும் மூன்றாம் விடியோ நடுவர் கொண்டுவரலாமா கூடாதா என விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் விளையாட்டை நிறுத்தி, நிதானமாக பெரிய திரையை பார்த்துகொண்டு கோலா இல்லியா, கையால போட்டானா என்றா பார்த்துகொண்டிருக்க முடியும் என என்று இங்கிருக்கும் பரம கால்பந்தாட்ட ரசிகர்கள் அபிப்ராய படுகிறார்கள். கிரிக்கெட் மாதிரி விளையாட்டுக்கு வேண்டுமானால் அது சரிப்பட்டு வரும். அவுட்டா இல்லியா என்று முடிவு தெரிவதற்கு முன், ட்ரின்க்ஸ் குடித்து, நகர்ந்துபோய் தொந்திரவு மண்ணும் கவட்டைகார்டை சரி செய்து கொண்டு, அவிழ்ந்த் போன ஷூ லேசை கட்டிக்கொண்டு என சாகவாசமாக விளையாட்டை தொடர முடியும்.

மனித திறனின் வரையரைக்கு உட்ட பட்டே இந்த மாதிரி விளையாட்டுக்கள் இருக்க வேண்டும். என்னதான் தொழில்நுட்பங்கள் வந்தாலும், இப்ப இந்த ஹென்றி மாதிரி கையால கோல் போடுற மாதிரி நிலை வரும் போது, அந்த தனி நபரின் நேர்மை இனி சந்தேகிக்கப்படும்.

1956-வரை ஓடிக்கொண்டிருந்த ட்ராம்களை அப்போது வந்த டீசல் பேருந்து கவர்ச்சியாக இருந்ததால் பிடிங்கி வைத்துவிட்டார்கள். இப்போது மறுபடி சின்னக்குழந்தை மாதிரி அடம் பிடித்து மற்ற ஐரோப்பிய நகரங்களில் இருப்பது போல் எனக்கும் ட்ராம் வேணும் என எடின்பரோவின் ராசகுமார தெருவை ட்ராம் வண்டிக்காக தோண்டி, இப்படி இருந்ததை


இப்படி ஆக்கிவிட்டார்கள்.


வாரா வாரம் இந்த ராசகுமார வீதிக்கு போகும் சாலைகளில் போக்குவரத்தை வெவ்வேறு திக்கில் திருப்பி விட்டுவிடுவார்கள். கிட்டதட்ட வானிலை அறிக்கை மாதிரி எப்படி திருப்பி விடுவார்களோ என்ற குழப்ப நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. உள்ளூர் மக்கள் பாடு பரவாயில்லை சுற்றுலா வரும் மக்கள் நிலைதான் பரிதாபம். GPS, மற்றும் வரைபடத்தை வைத்துக்கொண்டு ஆங்காங்கே முழித்துக்கொண்டு நிற்கும் பல பிரயாணிகள் இப்போது சகஜம். இதனால் இந்த தெருவிலிருக்கும் அநேக கடைகளில் வியாபாரம் மந்தமாகிவிட்டது என பெருமூச்சு விடுகிறார்கள்.

2011 முடித்து விடுவோம்னு சொல்லி இப்ப இந்த ட்ராமுக்கான் இருப்பு பாதையை அமைக்கும் நிறுவனம் செலவு அதிகரிக்க கூடும் அப்படீன்னு இதுக்காக எடின்பரோ நகர மன்றத்திடம் மேலும் நிதி கேட்க, அதை மன்றம் ஏற்க மறுத்து இழுபறி நிலையாகி இதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என உணர்ந்து எப்படியோ சமரசம் செய்து 2012ல் முடிச்சுடுவோம்னு சொல்லியிருக்கிறார்கள்.

இந்த பதிவை முடிப்பதற்கு முன் சமீபத்தில் நான் பார்த்த ஸ்காட்லாந் பற்றிய விடியோ, பேக்பைப்பர் இசையுடன் மிக அறுமையாக பதிவு செய்ய பட்டுள்ளது.