feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

நட்பே சாகும்வரை! சசிக்குமார்

Labels:

காதலைவிட நட்பே சாகும்வரை நம்முடன் இருக்கும்; இயக்குநர் சசிக்குமார்

சுப்பிரமணியபுரம், நாடோடிகள் படங்களின் மூலம் இளைஞர்கள் மனசில் பச்சக்குன்னு ஒட்டிக்கிட்டவர் இயக்குநர் சசிக்குமார். இவர் மதுரையில் நடந்த அனைத்து கல்லூரி மாணவியருக்கான மாநில கலை போட்டி விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

’’மாணவ பருவத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டும். எனவே இந்த பருவத்தை மகிழ்ச்சியாகவும், ஜாலியாகவும் அனுபவியுங்கள். வாழ்வில் பல தோல்விகளையும், அவமானங்களையும் கடந்துதான் சாதிக்க வேண்டி உள்ளது.


நானும் நிறைய தோல்விகளை தாண்டித்தான் இந்த நிலைக்கு வந்தேன். ஆனால் எவ்வளவு போராட்டத்திலும் கடுமையாக உழைத்தால் வெற்றி பெறலாம்.

ஆனால் வெற்றியின் மூலம் கிடைக்கும் புகழ், பெருமைக்கு அடிமையாகி விடக்கூடாது. புகழும் பெருமையும் நமக்குத்தான் அடிமையாக இருக்க வேண்டும். நாம் பெறும் வெற்றிக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருப்பவர்கள் நண்பர்கள்தான்.

எனவே நண்பர்களை எந்த நிலையிலும் மறக்கக்கூடாது. நட்பை எதற்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது. காதலை விட நட்புதான் சிறந்தது. நட்பு மட்டுமே சாகும்வரை நம்முடன் இருக்கும். காதல் கூட பாதியில் வருவதுதான். எனவே நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’என்று பேசினார்.





1 comments:
gravatar
yukesh2020 said...
September 26, 2009 at 11:32 AM  

sasikumar is perfect hero for reality cinema.. he is going to move the next step in tamil cinema

Post a Comment